நாமக்கல் அருகே 13 வயது சிறுமியை காதலிப்பதாகக் கூறி ஆசை வார்த்தை காண்பித்து, கடத்திச் சென்று கட்டாய திருமணம் செய்த இளைஞரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் கோபி. கட்டுமான கூலித் தொழிலாளியான இவர் ஓடப்பள்ளி பகுதியைச் சேர்ந்த 13 வயது சிறுமியை காதலிப்பதாக கூறி கடந்த 18ம் தேதி கடத்திச் சென்றுள்ளார். இச்சம்பவம் குறித்து சிறுமியின் பெற்றோர் பள்ளிபாளையம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தியதில் சிறுமியை கடத்திச் சென்று கோபி கட்டாயத் திருமணம் செய்தது தெரியவந்தது. இதையடுத்து தனிப்படை போலீசார் கோபியை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.