“உங்கள் நம்பிக்கையே எனது மிகப்பெரிய பலம்” – ராகுல் காந்தி!

மக்களவை எதிர்க்கட்சி தலைவராக ராகுல் காந்தி பதவியேற்று 2 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.

ராகுல் காந்தி மக்களவை எதிர்க்கட்சி தலைவராக பதவியேற்று இன்றுடன் 2 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதனை முன்னிட்டு ராகுல் காந்தி தனது எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், “மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவராக நான் பொறுப்பேற்று இன்றுடன் இரண்டு ஆண்டுகள் நிறைவடைகின்றன. நான் மக்களவையின் எதிர்க்கட்சித் தலைவராகப் பொறுப்பேற்று இன்றுடன் இரண்டு ஆண்டுகள் ஆகின்றன. இந்த இரண்டு ஆண்டுகளில், ஒவ்வொரு இந்தியனின் குரலையும் அதிகார மையங்களிடம் கொண்டு சேர்ப்பதற்காகவே எனது அனைத்து நாட்களையும் அர்ப்பணித்தேன்.

நீட் (NEET) தேர்வு எழுதுபவர்களுக்கான போராட்டம், தேர்தல் முறைகேடுகளை வெளிச்சத்திற்குக் கொண்டுவருதல் அல்லது அரசியலமைப்பைப் பாதுகாத்தல் என ஒவ்வொரு களத்திலும் நான் உங்களுடன் நின்றிருக்கிறேன்,இன்றும் உங்களுடன் நிற்கிறேன்; என்றும் உங்களுடன் நிற்பேன்.

வீதிகள் முதல் நாடாளுமன்றம் வரை, உங்கள் நம்பிக்கையே எனது மிகப்பெரிய பலம். இந்தப் பயணம் நீண்டது, ஆனால் எனது உறுதி மாறாதது. உங்களுக்காக ஒவ்வொரு போராட்டத்தையும் நான் தொடர்ந்து முன்னெடுப்பேன்”. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.