நெல்லையை சேர்ந்த இளம் இயக்குநர் ஜாக்சன்ராஜ் இயக்கிய அறமுடைத்த கொம்பு” திரைப்படத்திற்கு தாகூர்இன்டர்நேஷனல் ஃபிலிம் ஃபெஸ்டிவலில் அவுட் ஸ்டேன்டிங் அச்சீவ்மென்ட் அவார்டு பிரிவில் விருது அறிவிக்கப்பட்டுள்ளது
நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை அருகே பெருமாள்புரம் பகுதியில் வசிப்பவர்
ஜாக்சன்ராஜ். இவர் பரியேறும் பெருமாள் படத்தை இயக்கிய மாரி
செல்வராஜிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்தவர். 7 ஆண்டுகளுக்கு முன்பு தான்
பிறந்த மாவட்டமான நெல்லைக்கு பெருமை சேர்க்கும் வகையில் “நெல்லை ஆந்தம்” என்ற
ஆல்பத்தை உருவாக்கினார். இந்த ஆல்பம் மக்கள் மத்தியில் மிகப்பெரிய வெற்றி
பெற்றதைத் தொடர்ந்து, திரைத்துறையில் கால் பதிக்க விரும்பிய ஜாக்சன்ராஜிக்கு
இயக்குனர் மாரி செல்வராஜ் தனது பரியேறும் பெருமாள் திரைப்படத்தில் உதவி
இயக்குனராக பணி புரிவதற்கு வாய்ப்பு வழங்கினார்.
உதவி இயக்குநராக்கப் பணியை தொடங்கிய ஜாக்சன் ராஜ் அவ்வப்போது சிறிய கதாபாத்திரங்களில் திரைப்படங்களில் நடித்து கொண்டும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடன இயக்குனராக பணியாற்றியும் வந்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து 2021 ஆண்டு மார்ச் மாதம் முதல் திரைப்பட கனவை இயக்கத்
தொடங்கினார். “அறமுடைத்த கொம்பு” என்ற பெயரில் தனது சொந்த மாவட்டமான நெல்லையை சேர்ந்த மக்கள் மற்றும் திரைக்கலைஞர்களைக் கொண்டு இந்த திரைப்படத்தை உருவாக்கியுள்ளார். கடந்த மாதம் சிங்கப்பூரில் நடந்த World film carnival விழாவில் Narrative feature பிரிவில் “அறமுடைத்த கொம்பு” திரைப்படத்திற்கு சிறந்த
திரைப்படத்திற்கான விருது அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அடுத்ததாக இந்த மாதம் 08.08.22 ம் தேதியில் மேற்கு வங்கத்தில் நடைபெற்ற தாகூர் இன்டர்நேஷனல் ஃபிலிம் ஃபெஸ்டிவலில் “அறமுடைத்த கொம்பு” திரைப்படத்திற்கு அவுட் ஸ்டேன்டிங் அச்சீவ்மென்ட் அவார்டு பிரிவில் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
நெல்லையை சேர்ந்த இளம் இயக்குநரின் முதல் திரைப்படத்திற்கு திரைப்படம்
வெளியாவதற்கு முன்பு தொடர்ந்து விருதுகளை பெற்று வருவது மண் சார்ந்த தமிழ்
படைப்புக்கு கிடைக்கும் மரியாதையாகவே பார்க்கப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து நெல்லையைச் சேர்ந்த சென்னையில் வாழும் திரைத்துறை கலைஞர்கள் இளம் இயக்குனரை பாராட்டி வாழ்த்து தெரிவித்தும் வருகிறார்கள். இதே நிகழ்ச்சியில் சிறந்த நடிகருக்கான விருது மாமனிதன் படத்துக்காக நடிகர் விஜய்சேதுபதிக்கு அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது இதுகுறித்து இயக்குனர் ஜாக்சன்ராஜ்
கூறும்போது, மண்சார்ந்த கருவோடு இந்த படத்தை இயக்கியுள்ளேன் முதல் படத்திலேயே
விருது கிடைத்திருப்பது பெருமையாக இருக்கிறது என்று தெரிவித்தார்.
அ.மாரித்தங்கம்







