கமலுக்கு ரஜினியும், விஜய்க்கு அஜித்தும் இருப்பது போல எனக்கு பிடிமானம் இல்லாமல் போய்வீட்டீர்களே வாலி.. என கவிஞர் வைரமுத்து உருக்கமாக தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
சீனிவாச அய்யங்காருக்கும், பொன்னம்மாளுக்கும் 1931 ஆம் ஆண்டு அக்டோபர் 29ம் தேதி மகனாக பிறந்தவர் வாலி. இவரது இயற்பெயர் டி. எஸ். ரங்கராஜன். அந்த காலத்தில் ஓவியத்தில் சிறந்து விளங்கிய மாலியை போல புகழ்பெற வேண்டும் என நினைத்தார் வாலி. அதனால் தனது பள்ளி நண்பன் பாபு-வால் வாலி என பெயர் மாற்றப்பட்டார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
ஓவியராக வேண்டுமென முயற்சி செய்த வாலி, கவிஞராக உருவெடுத்தார். 1958ம் ஆண்டு, அழகர் மலைக்கள்வன் என்ற திரைப்படத்தில் நிலவும் தாரையும் நீயம்மா, இந்த உலகம் ஒருநாள் உனதம்மா என்ற பாடல் மூலமாக தமிழ் சினிமாவில் தனது முதல் பாடலை எழுதி பதிவு செய்தார். 1958 முதல் 2013 வரை 15,000 க்கும் மேற்பட்ட திரைப்பாடல்களை எழுதியவர் வாலி.
இதனையும் படியுங்கள்: “குளத்திலே தண்ணியில்லே,,, கொக்குமில்லே… மீனுமில்லே”
நான் ஆணையிட்டால் அது நடந்து விட்டால், மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும் போன்ற பாடல்களும், முஸ்தபா முஸ்தபா, காட்டுக்குயிலு மனசுக்குள்ளே போன்ற பாடல்களும் இவரது எவர்கிரீன் பாடல்களாக இன்றுவரை ஒலித்து வருகின்றன. தமிழ் சினிமாவில் கவிஞர் வாலியும் கவிஞர் வைரமுத்துவும் எதிர் எதிர் திசையில் நின்று பல்வேறு பாடல்களை போட்டி போட்டுக் கொண்டு தந்துள்ளனர்.
கவிஞர் வைரமுத்து வாலி மறைந்த அன்று அவருக்கு மரியாதை செய்து விட்டு பத்திரிக்கைளைடம் “ கவிஞர் வாலியின் இறப்பு இட்டு நிரப்ப முடியாத ஒன்று. இந்தியாவிலேயே அதிக பாடல்களை எழுதியவர் என்ற பெருமை கவிஞர் வாலிக்கு உண்டு. எம்ஜிஆர் , சிவாஜி தொடங்கி நான்கு தலைமுறைக்கு பாடல்களை எழுதியவர். கவியரசு கண்ணதாசனுக்கு முன்னே யாரும் நெருங்க முடியாத போது அவருக்கு சற்றே நெருக்கமாய் நடந்து வந்த கவிஞர் அவர். கவிஞர் வாலியின் தமிழ் மரணம் தொட முடியாத உயரத்தில் இருக்கிறது என கவிஞர் வைரமுத்து தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் கவிஞர் வாலி குறித்து வைரமுத்து தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது..
”கமல் இருக்கும் வரை ரஜினிக்கும்
ரஜினி இருக்கும் வரை கமலுக்கும்
விஜய் இருக்கும் வரை அஜித்துக்கும்
அஜித் இருக்கும் வரை விஜய்க்கும்
ஒரு பிடிமானம் இருக்கும்
எனக்கிருந்த பிடிமானத்தைப்
பிய்த்துக்கொண்டு போய்விட்டீர்களே
வாலி அவர்களே
காற்றில் கத்தி
சுற்றிக் கொண்டிருக்கிறேன்”
கமல் இருக்கும் வரை
ரஜினிக்கும்
ரஜினி இருக்கும் வரை
கமலுக்கும்விஜய் இருக்கும் வரை
அஜித்துக்கும்
அஜித் இருக்கும் வரை
விஜய்க்கும்ஒரு பிடிமானம் இருக்கும்
எனக்கிருந்த பிடிமானத்தைப்
பிய்த்துக்கொண்டு
போய்விட்டீர்களே
வாலி அவர்களேகாற்றில் கத்தி சுற்றிக்
கொண்டிருக்கிறேன்— வைரமுத்து (@Vairamuthu) March 29, 2023