அமைச்சர் செந்தில்பாலாஜியை ஆஜர்படுத்த கோரி அவரது மனைவி சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அமைச்சர் செந்தில் பாலாஜி இல்லம் மற்றும் தலைமை செயலகத்தில் உள்ள அவரது அலுவலகத்தில் அமலாக்கத்துறையினர் நேற்று சோதனை நடத்தினர். இதனைத் தொடர்ந்து நள்ளிரவில் அவர் கைது செய்யப்பட்டார். அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் செந்தில் பாலாஜியின் மனைவி மேகலா சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்துள்ளார். மனுவில், செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்ட விவகாரத்தில் விதிமீறல் உள்ளதாகவும் , நோட்டீஸ் அனுப்பி விசாரிக்கும் நடைமுறை பின்பற்றப்படவில்லை என கூறப்பட்டுள்ளது. மேலும் விசாரணையின் போது எந்த சட்ட நடைமுறையும் பின்பற்றப்படவில்லை என மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என மூத்த வழக்கறிஞரும், திமுக எம்.பி.யுமான என்.ஆர்.இளங்கோ நீதிபதிகள் சுந்தர், சக்திவேல் அமர்வில் முறையிட்டார். இந்த மனு பிற்பகல் 2.15 மணிக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.