29.2 C
Chennai
May 20, 2024
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

மகளிர் உரிமைத்தொகை: 11.85 லட்சம் பேர் மேல்முறையீடு!

மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின்கீழ் உதவித்தொகை பெற 11 லட்சத்து 85 ஆயிரம் பேர் மேல்முறையீடு செய்துள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ1,000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தை செப்டம்பர் 15-ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். சுமார் 1.70 கோடி விண்ணப்பங்கள் வரை பெறப்பட்ட நிலையில், 1 கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் குடும்பத் தலைவிகள் தகுதியானவர்களாக தேர்வு செய்யப்பட்டனர். அவர்களுக்கு மாதந்தோறும் ரூ.1000 வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டு வருகிறது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

நிராகரிக்கப்பட்டவர்கள் இ-சேவை மையங்கள் மூலமாக மேல்முறையீடு செய்யலாம் என தமிழ்நாடு அரசு அறிவித்திருந்ததால், இ-சேவை மையங்களில் பெண்கள் சென்று உதவித்தொகை பெறுவதற்காக மேல்முறையீடு செய்தனர். முன்னதாக கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்கு அக்டோபர் 25-ம் தேதி வரை மேல்முறையீடு செய்யலாம் என தமிழ்நாடு அரசு அறிவித்திருந்தது. அதன்படி அக்டோபர் 25-ம் தேதி வரை 11 லட்சத்து 85 ஆயிரம் பேர் மேல்முறையீடு செய்துள்ளனர்.

இதையும் படியுங்கள் : கழுகு… காக்கா… – ‘லியோ’ வெற்றி விழாவில் விஜய் சொன்ன குட்டி ஸ்டோரி!!

மேல்முறையீடு செய்தவர்களின் விண்ணப்பங்களை பரிசீலிக்கும் பணிகள் தொடங்கியுள்ளதாகவும், தகுதியானவர்களுக்கு வரும் நவம்பர் 25-ம் தேதி முதல் குறுஞ்செய்திகள் அனுப்பப்படும் என்றும் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. தகுதியான அனைவருக்கும் மகளிர் உரிமைத் தொகை கிடைப்பதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் தமிழ்நாடு அரசு கூறியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading