பெட்ரோல் டீசல் விலையை ஏன் குறைக்கவில்லை என்பதற்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம் அளித்துள்ளார்.
டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், எண்ணெய் பத்திரங்கள் காரணமாக ஏற்பட்ட சுமையால் பெட்ரோல், டீசல் விலையை குறைக்க இயலவில்லை என்றும் மக்களின் கவலை ஏற்படையதே, ஆனால் மத்திய, மாநில அரசு விவாதித்து வழியை உருவாக்கும் வரை அதற்கு தீர்வு இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
முந்தைய காங்கிரஸ் அரசு, 1.44 லட்சம் கோடிக்கு எண்ணெய் பத்திரங்களை வெளியிட்டு எரிபொருள் விலையை குறைத்தது என்றும் அதனால்தான் தங்களால் பெட்ரோல், டீசல் விலையை குறைக்க முடியவில்லை என்றும் கூறினார்.
எரிபொருள் மீதான சுங்க வரிகுறைப்பு தற்போதைக்கு இல்லை என்றும் காங்கிரஸ் அரசு வெளியிட்ட எண்ணெய் பத்திரங்களுக்கு கடந்த 5 ஆண்டுகளில் ரூ.70.195 கோடிக்கும் மேல் மத்திய அரசு வட்டி செலுத்தியுள்ளதாகவும் குறிப்பிட்ட நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், 2020-க்குள் இன்னும் ரூ.37,000 கோடி அளவுக்கு வட்டி செலுத்த வேண்டும் எனவும் தெரிவித்தார்.
வட்டி செலுத்தியபோதும் 1.30 லட்சம் கோடி நிலுவையில் உள்ளதாகக் கூறிய அமைச்சர், எண்ணெய் பத்திரங்களின் சுமை இல்லை என்றால், எரிபொருள் மீதான கலால் வரியை குறையில் நிலையில் அரசு இருந்திருக்கும் என்றும் சொன்னார்.