தென் மேற்கு பருவமழை நேற்று (ஜூன் 4) தொடங்கியது. இதனை தொடர்ந்து கன்னியாகுமரி உள்பட தமிழ் நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இன்று காலை 10 மணி வரை தமிழ் நாட்டின் 8 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன் படி கோவை, நெல்லை, தென்காசி, தேனி, நீலகிரி, திருப்பூர், திண்டுக்கல், கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இன்று காலை 10 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.






