சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனத்தின் மூலம் விஜய்யை நடிப்பில் முன்னதாக பூவே உனக்காக, லவ்டுடே, துள்ளாத மனமும் துள்ளும், திருப்பாச்சி போன்ற வெற்றிப் படங்கள் வந்துள்ளன.
தமிழில் முன்னணி நட்சத்திரமாக வலம் வரும் நடிகர் விஜய் குறித்த செய்திகளும், அவரது படம் தொடர்பான சிறு செய்திகளும் பெரிய அளவில் பேசுபொருளாகி வருகிறது.
அப்படி இருக்க விஜய் தற்போது தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கத்தில் “வாரிசு” படத்தில் நடித்து வருகிறார் விஜய். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றது.
வாரிசு படத்தைத் தொடர்ந்து விஜயின் 67-வது படம்,லோகேஷ் கனகராஜ் இயக்கத்தால் உருவாக உள்ளது. ஏற்கனவே இவர்களது கூட்டணியில் வெளியான “மாஸ்டர்” திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.இந்த படத்திற்குப் பிறகு விஜய் – லோகேஷ் கனகராஜ் கூட்டணி மீண்டும் இணைய உள்ள நிலையில், இந்த படத்தின் ப்ரீ ப்ரொடக்ஷன் பணிகள் நடந்து வருகிறது. இந்நிலையில் விஜயின் புதிய படம் தொடர்பான மற்றொரு முக்கிய தகவல் வெளியாகியுள்ளது.
பிரபல ஆஹா ஓடிடி தளத்தில் சர்கார் என்ற கேம் ஷோ ஒன்றை நடிகர் ஜீவா தொகுத்து வழங்குகிறார்.இதற்கான ப்ரமோஷன் பணிகள் நடந்து வரும் நிலையில் அதன் ஒரு பகுதியாகச் செய்தியாளர்களைச் சந்தித்தார் ஜீவா. அப்போது பத்திரிக்கையாளர்களுக்கு எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளித்தார் நடிகர் ஜீவா.
அப்போது, பிரபல தயாரிப்பு நிறுவனமான குட் பிலிம்ஸின் நிறுவனத்தின் 100வது படத்தில் விஜய் நடிப்பதாக கூறப்படுகிறதே என்று கேள்வி எழுப்பினர். அதற்குப் பதில் கூறிய ஜீவா “விஜய் நடிக்க அதிக வாய்ப்புள்ளது, ஒரு வாரத்திற்கு முன்புதான் அவரை சந்தித்துப் பேசியிருக்கிறோம், கடவுளின் ஆசீர்வாதம் கிடைத்தால் நிச்சய,ம் அவர் நடிப்பார் மேலும் வாய்ப்புக்கிடையில் அப்படத்தில் நானும் நடிப்பேன் என்று கூறினார்.
தமிழ் திரையுலகின் மிக முக்கிய தயாரிப்பாளரான ஆர்பி சவுத்ரி தனது சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனத்தின் மூலம் விஜய்யை வைத்து முன்னதாக பூவே உனக்காக, லவ்டுடே, துள்ளாத மனமும் துள்ளும், திருப்பாச்சி போன்ற வெற்றிப் படங்களைக் கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.







