உடுமலை அருகே மிகவும் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோயில் திருவிழாவில், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனா்.
திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்த கொழுமம் கோட்டை மாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா உடுமலை, மடத்துக்குளம் ஆகிய பகுதியில் இருந்து 18 கிராமங்களை சேர்ந்த மக்களால் ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் 15 நாள் நோன்பு சாட்டுதலில் தொடங்கி கம்பம் நடுதல், பூவோடு எடுத்தல், பறவை காவடி, அலகு குத்துதல் என பல்வேறு வேண்டுதல் நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
—ரூபி.கா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.