திருச்சியில் அமைக்கப்பட உள்ள டைடல் பார்க்கால், வருங்காலத்தில் திருச்சி மிகப்பெரிய ஹப்பாக மாறும் என்று அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.
திருச்சி தில்லைநகரில் உள்ள மக்கள் மன்றத்தில் தமிழ்நாடு அரசின் சாதனைகள் மற்றும் திட்டங்கள் குறித்து விளக்கும் புகைப்பட கண்காட்சியை தமிழ்நாடு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோர் இணைந்து துவக்கி வைத்தனர்.
இந்நிகழ்ச்சிக்குப் பின் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கே.என்.நேரு, “20 மாத காலம் தமிழ்நாடு அரசு சார்பில் கொண்டு வந்த திட்டங்கள் மற்றும் செயல்பாடுகள்
குறித்து விளக்க கண்காட்சி துவக்கி வைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக நிறைய நிதி வேண்டும் என்று முதலமைச்சர் நேற்று பிரதமரிடம் வலியுறுத்தியதை பார்த்து இருப்பீர்கள்.
இதையும் படியுங்கள் : நியூஸ் 7 தமிழின் கல்வி கண்காட்சி : அரசு பள்ளி மாணவிக்கு பொறியியல் படிப்பிற்கான முழு செலவும் ஏற்பு
ஆளுநருடைய பேச்சுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிக்கையின் வாயிலாக பதில் அளித்து விட்டார். அதைப்பற்றி நான் ஏதும் கூற முடியாது. ஆளுநர் தனது பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும் என்று முதலமைச்சர் நேரடியாகவே தெரிவித்துவிட்டார்.
அரிஸ்டோ மேம்பாலம் அடுத்த வாரம் துவக்கி வைக்கப்பட உள்ளது. டி.பி.ஆர்க்காக காத்து கொண்டுள்ளோம். திருச்சியில் டைடல் பார்க் அமைக்கப்படும் என்று முதல்வர் அறிவித்துள்ளார். மாநகராட்சிக்கு சொந்தமான பத்து ஏக்கர் நிலத்தை, உடனடியாக அதற்கு கொடுக்க உள்ளோம். டைடல் பார்க்க போன்ற எண்ணற்ற திட்டங்கள் வர உள்ளாதால் திருவெறும்பூர் முதல் அசூர் வரை, அரை அடி கூட வாங்க முடியாத அளவிற்கு அந்த பகுதி வளர்ச்சி பெறும். வருங்காலத்தில் திருச்சி ஒரு மிகப்பெரிய ஹப்பாக மாற உள்ளது” என்று தெரிவித்தார்.







