28.6 C
Chennai
April 25, 2024
முக்கியச் செய்திகள் தமிழகம்

தொடர் விடுமுறை: உதகையில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

தொடர் விடுமுறையால் உதகையில் உள்ள சுற்றுலாப் பயணிகள் ஏராளமானோர் குவிந்தனர்.

நீலகிரி மாவட்டம் உதகையில் குளுமையான சூழல் நிலவுவதால், சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது. இந்நிலையில், விநாயகர் சதுர்த்தி, வார விடுமுறை நாட்கள் என தொடர் விடுமுறையால் வழக்கத்திற்கு மாறாக ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்துள் ளனர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

தாவரவியல் பூங்கா, கண்ணாடி மாளிகையில் உள்ள மலர் கண்காட்சி உள்ளிட்டவற்றை சுற்றுலாப் பயணிகள் உற்சாகத்துடன் கண்டு ரசித்தனர். குடும்பத்துடன் சேர்ந்து செல்பி எடுத்து மகிழ்ந்து சுற்றுலாப் பயணிகள், ரோஜா பூங்காவில் பூத்து குலுங்கிய வண்ண மலர் களையும், இயற்கை அழகையும் பார்வையிட்டனர்.

அதே போன்று, பைக்காரா படகு இல்லம், சூட்டிங் ஸ்பாட் உள்ளிட்ட சுற்றுலா தலங்களிலும் ஏராளமானோர் குவிந்ததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. உதகை அரசு தாவரவியல் பூங்காவுக்கு கடந்த மூன்று நாட்களில் 20,000 க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் வருகை தந்துள்ளனர். முழு ஊரடங்குக்கு பின்னர் சுற்றுலா தலங்கள் களைகட்டி உள்ளது

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading