நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெறுபவர்களின் எண்ணிக்கை 73 நாட்களுக்குப் பிறகு 7 லட்சத்து 98 ஆயிரமாக குறைந்துள்ளது.
நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் தினசரி எண்ணிக்கை, தொடர்ந்து குறைந்து வருகிறது. இதுதொடர்பாக, மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 62 ஆயிரத்து, 480 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, நாட்டில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2 கோடியே 97 லட்சமாக உயர்ந்துள்ளது.
கடந்த 24 மணிநேரத்தில் 88 ஆயிரத்து 977 பேர் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை, 2 கோடியே 85 லட்சத்து 80 ஆயிரத்து 647 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்தவர்களில், கடந்த 24 மணி நேரத்தில் ஆயிரத்து 587 பேர் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து, நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை, 3 லட்சத்து 83 ஆயிரத்து 490 ஆக உயர்ந்துள்ளது.
நாடு முழுவதும், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெறுபவர்களின் எண்ணிக்கை, 73 நாட்களுக்குப் பிறகு, 7 லட்சத்து 98 ஆயிரத்து 656 ஆக குறைந்துள்ளது. இதற்கிடையே நாட்டில் இதுவரை 26 கோடியே 89 லட்சத்து 60 ஆயிரத்து 399 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.