யாருக்கு அரசியல் காழ்ப்புணர்ச்சி – ஓபிஎஸ்க்கு முதலமைச்சர் சரமாரி கேள்வி

திமுக ஆட்சியில் நல்ல திட்டங்கள் எதுவாயினும் தொடர்ந்து செயல்படுத்தப்படும் என்று சட்டப்பேரவையில் முதலமைச்சர்மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சட்டப் பேரவையில் பட்ஜெட் மீதான பொது விவாதத்தில் பேசிய எதிர்க்கட்சித் துணைத்தலைவர் ஓ. பன்னீர்செல்வம், தாலிக்கு தங்கம்…

திமுக ஆட்சியில் நல்ல திட்டங்கள் எதுவாயினும் தொடர்ந்து செயல்படுத்தப்படும் என்று சட்டப்பேரவையில் முதலமைச்சர்மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சட்டப் பேரவையில் பட்ஜெட் மீதான பொது விவாதத்தில் பேசிய எதிர்க்கட்சித் துணைத்தலைவர் ஓ. பன்னீர்செல்வம், தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டம் கைவிடப்பட்டதற்கு அரசியல் காழ்ப்புணர்ச்சியே காரணம் என குற்றம் சாட்டினார்.

இதற்கு பதிலளித்த தமிழ்நாடு முதலமைச்சர், அதிமுக தொடங்கிய திட்டங்களை திமுக நிறுத்துவது போன்ற போலித்தோற்றத்தை உருவாக்க ஓ.பன்னீர்செல்வம் முயல்வதாகவும், அரசியல் காழ்ப்புணர்ச்சியால் திட்டங்களை முடக்கியது அதிமுக அரசுதான் என்றும் கூறினார்.

மேலும், அதிமுக ஆட்சி காலத்தில் கைவிடப்பட்ட திட்டங்களை பட்டியலிட்ட முதலமைச்சர், புதிய தலைமைச் செயலகத்தை மருத்துவமனையாக மாற்றியது யார்?, அண்ணா நூற்றாண்டு நூலகத்தை பாழ்ப்படுத்தியது யார்?, கல்வெட்டு, திட்டங்களில் கருணாநிதி பெயரை எடுத்த ஆட்சி எது?, ராணி மேரி கல்லூரியை அப்புறப்படுத்த முயன்றது யார்? உழவர் சந்தைகளை மூடியது யார்? உடன்குடி மின் திட்டத்தை நிறுத்தியது யார்?, மதுரவாயல் – துறைமுகம் சாலை திட்டத்தை முடக்கியது யார்?, பாடப்புத்தகத்தில் கருணாநிதி பெயரை ஸ்டிக்கர் ஒட்டியது யார்? என தொடர் கேள்விகளை முன்வைத்தார்.

மேலும், இதை சொல்வதால் நாங்கள் பழிவாங்குகிறோம் என்பதில்லை என கூறிய அவர், நல்ல திட்டங்கள் எதுவாக இருந்தாலும் அதை தொடரும் ஆட்சி கருணாநிதி ஆட்சி, திமுக ஆட்சி என்று தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.