குரூப்-2, குரூப்-4 தேர்வுகளை நடத்துவது குறித்து இன்று ஆலோசனை

குரூப்-2, குரூப்-4 தேர்வுகள் எப்போது நடத்துவது என்பது குறித்து தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தேர்வு ஆணையம் இன்று ஆலோசனை மேற்கொள்கிறது கொரோனா காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தேர்வு ஆணையம்…

குரூப்-2, குரூப்-4 தேர்வுகள் எப்போது நடத்துவது என்பது குறித்து தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தேர்வு ஆணையம் இன்று ஆலோசனை மேற்கொள்கிறது

கொரோனா காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தேர்வு ஆணையம் போட்டி தேர்வுகளை நடத்தாமல் உள்ளது. 2019ஆம் ஆண்டுக்கு முன்பு நடைபெற்ற தேர்வுகளில் வெற்றி பெற்றவர்களின் சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் மட்டும் அவ்வப்போது நடைபெற்ற வந்தன.

இந்நிலையில், குரூப்-2, குரூப்-4 தேர்வுகளை எப்போது நடத்துவது என்பது குறித்து தமிழ் நாடு அரசு பணியாளர்கள் தேர்வாணைய அதிகாரிகள் இன்று ஆலோசனை நடத்த வுள்ளனர். இதில், குரூப்-2, குரூப்-2ஏ, குரூப்-4 உள்ளிட்ட 38 வகையான தேர்வுகளை எப்போது நடத்தலாம் என்பது குறித்து ஆலோசனை செய்து தேர்வுகளின் தேதி இறுதி செய்யப்படும் என தெரிகிறது.

மேலும், அனைத்துவகை தேர்வுகளிலும் தமிழ்மொழி பாடத்தாள் சேர்ப்பது குறித்தும் ஆலோசிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.