உழைப்பால் மட்டுமே திமுகவில் தான் தலைமைப் பதவிக்கு வந்திருப்பதாக, அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை ராயபுரத்தில் வடசென்னை பகுதியில், திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து, திமுக தலைவர் ஸ்டாலின் பங்கேற்ற பரப்புரை பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு வேட்பாளர்களுக்கு ஆதரவாக, தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அங்கு கூடியிருந்த பொதுமக்களிடையே பேசுகையில், எப்போதும் திமுக தேர்தல் அறிக்கை கதாநாயகனாக தான் இருக்கும், ஆனால் அதிமுகவின் தேர்தல் அறிக்கை வில்லனாக அதுவும் காமெடி வில்லனாக இருக்கும் என்றும் ஸ்டாலின் விமர்சித்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
மேலும், காசிமேட்டில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என்றும், கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூலகம் போன்று, வடசென்னையில் மிகப்பெரிய நூலகம் அமைக்கப்படும் என்றும் ஸ்டாலின் தெரிவித்தார். தமிழகத்தில் பாஜக வெற்றி பெற முடியாது என்பது வரலாறு, ஆனால் தற்போது அதிமுக மூலம், பாஜக வெற்றி பெற முயற்சிப்பதாகவும், ஸ்டாலின் குறிப்பிட்டார். மேலும், உழைப்பால் மட்டுமே திமுகவில் தான் தலைமைப் பதவிக்கு வந்திருப்பதாகவும், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விமர்சிப்பது போல் தகுதியில்லாமல் வரவில்லை என்றும் ஸ்டாலின் குறிப்பிட்டார்.