32.5 C
Chennai
April 25, 2024
முக்கியச் செய்திகள் தேர்தல் 2021 தமிழகம் செய்திகள்

உழைப்பால் திமுகவில் உயர்ந்தவன் நான்: மு.க.ஸ்டாலின்

உழைப்பால் மட்டுமே திமுகவில் தான் தலைமைப் பதவிக்கு வந்திருப்பதாக, அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.


சென்னை ராயபுரத்தில் வடசென்னை பகுதியில், திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து, திமுக தலைவர் ஸ்டாலின் பங்கேற்ற பரப்புரை பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு வேட்பாளர்களுக்கு ஆதரவாக, தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அங்கு கூடியிருந்த பொதுமக்களிடையே பேசுகையில், எப்போதும் திமுக தேர்தல் அறிக்கை கதாநாயகனாக தான் இருக்கும், ஆனால் அதிமுகவின் தேர்தல் அறிக்கை வில்லனாக அதுவும் காமெடி வில்லனாக இருக்கும் என்றும் ஸ்டாலின் விமர்சித்தார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

மேலும், காசிமேட்டில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என்றும், கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூலகம் போன்று, வடசென்னையில் மிகப்பெரிய நூலகம் அமைக்கப்படும் என்றும் ஸ்டாலின் தெரிவித்தார். தமிழகத்தில் பாஜக வெற்றி பெற முடியாது என்பது வரலாறு, ஆனால் தற்போது அதிமுக மூலம், பாஜக வெற்றி பெற முயற்சிப்பதாகவும், ஸ்டாலின் குறிப்பிட்டார். மேலும், உழைப்பால் மட்டுமே திமுகவில் தான் தலைமைப் பதவிக்கு வந்திருப்பதாகவும், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விமர்சிப்பது போல் தகுதியில்லாமல் வரவில்லை என்றும் ஸ்டாலின் குறிப்பிட்டார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading