தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு 10 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்தது

தமிழ்நாட்டில் கொரோனா தினசரி பாதிப்பு 10 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்துள்ளது. தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று குறைந்து வருகிறது. இந்த நிலையில் சுகாதாரத் துறை வெளியிட்ட செய்திக் குறிப்பில், கடந்த 24…

தமிழ்நாட்டில் கொரோனா தினசரி பாதிப்பு 10 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்துள்ளது.

தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று குறைந்து வருகிறது. இந்த நிலையில் சுகாதாரத் துறை வெளியிட்ட செய்திக் குறிப்பில், கடந்த 24 மணி நேரத்தில் 9,118 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப் பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதையடுத்து இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 23 லட்சத்து 97 ஆயிரத்து 864 ஆக உயர்ந்துள்ளது.

தமிழ்நாடு முழுவதும் ஒரே நாளில், ஒரு லட்சத்து 67 ஆயிரத்து 437 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 9.118 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்றில் இருந்து 22 ஆயிரத்து 720 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை 22 லட்சத்து 66 ஆயிரத்து 793 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள் ளனர். அதே நேரத்தில், பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்று வந்தவர்களில், 210 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 30 ஆயிரத்து 548 ஆக அதிகரித்துள்ளது.

சென்னையிலும் கொரோனா தொற்று குறைந்து வருகிறது. புதிதாக 559 பேர் கொரோனாவால் பாதிக்கப் பட்டுள்ளனர். 33 பேர் உயிரிழந்துள்ளனர். 2367 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். கோவையில் 1227 பேருக்கும் ஈரோட்டில் 1041 பேருக்கும் புதிதாகத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. குறைந்தபட்சமாக பெரம்பலூரில் 40 பேருக்கு மட்டும் தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.