பால் கொள்முதல் விலை உயர்வு: தமிழக அரசு!

பால் கொள்முதல் விலையை உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழகத்தின் முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பின்னர் கையெழுத்திட்ட 5 முக்கிய கோப்புகளில் ஆவின் பால் லிட்டருக்கு 3 ரூபாய் குறைக்கப்படுவதும் ஒன்றாகும். இந்த…

பால் கொள்முதல் விலையை உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழகத்தின் முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பின்னர் கையெழுத்திட்ட 5 முக்கிய கோப்புகளில் ஆவின் பால் லிட்டருக்கு 3 ரூபாய் குறைக்கப்படுவதும் ஒன்றாகும். இந்த உத்தரவு வரும் மே மாதம் 16 ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

இந்நிலையில் பால் கொள்முதல் விலையை உயர்த்தி தமிழக அரசு ஆணை வெளியிட்டுள்ளது. அதனபடி, கொள்முதல் விலையில் பசும் பால் லிட்டருக்கு 4 ரூபாயும், எருமைப் பால் லிட்டருக்கு 6 ரூபாயும் உயர்த்தி தமிழக அரசு ஆணையிட்டுள்ளது. இதனால் பசும்பாலின் கொள்முதல் விலை லிட்டருக்கு 28 ரூபாயில் இருந்து 32 ரூபாயாகவும், எருமைப்பாலின் கொள்முதல் விலை 35 ரூபாயில் இருந்து 41 ரூபாயாகவும் நிர்ணயம் செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.