தமிழகத்தில் 30 ஆண்டுகள் அரசியலில் தாக்குப்பிடித்து இருப்பதே இமாலய சாதனை என திருமாவளவன் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
மதுரையில் விசிக சார்பில் நடைபெற்ற தேர்தல் வெற்றி விழாவில், கட்சி தொண்டர்களிடையே பேசிய திருமாவளவன், பல்வேறு நெருக்கடிகளை கடந்து, 30 ஆண்டுகளாக அரசியலில் தாக்குப்பிடித்திருப்பதே இமாலய சாதனை என கூறினார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
மக்களோடு இணைந்து பயணிக்கிற அரசியல் தான் கட்சிக்கு நல்லது என்று கூறிய அவர் இனி தேர்தல்களை புறக்கணிக்காமல், அனைத்து தேர்தல்களிலும் போட்டியிடு வேண்டும் என தெரிவித்தார். விசிகவின் அரசியல் பயணம் நீண்ட கால பயணம் என்பதால்தான், சட்டப்பேரவைத் தேர்தலில் தனிச்சின்னத்தில் நின்று தனித்தன்மை காக்க நினைத்ததாக குறிப்பிட்டார்.