துணிவு படத்தின் டிக்கெட்டுகள் மர்ம நபர்களால் திருட்டு – வேலூரில் பரபரப்பு

வேலூரில் அஜித் தலைமை நற்பணி இயக்க அலுவலகத்தில் ரசிகர்களுக்கு வழங்கப்பட இருந்த துணிவு படத்தின் ரசிகர்கள் காட்சி டிக்கெட்டுகள் மர்ம நபர்களால் திருடப்பட்டுள்ளன. வேலூர் காகிதப்பட்டறையில் அஜித் தலைமை நற்பணி இயக்கம் அலுவலகம் இயங்கி…

வேலூரில் அஜித் தலைமை நற்பணி இயக்க அலுவலகத்தில் ரசிகர்களுக்கு வழங்கப்பட இருந்த துணிவு படத்தின் ரசிகர்கள் காட்சி டிக்கெட்டுகள் மர்ம நபர்களால் திருடப்பட்டுள்ளன.

வேலூர் காகிதப்பட்டறையில் அஜித் தலைமை நற்பணி இயக்கம் அலுவலகம் இயங்கி
வருகிறது. இதன் தலைவராக சுரேஷ்குமார் என்பவரும், செயலாளராக சண்முகம் ஆகியோர் செயல்பட்டு வருகின்றனர், இந்நிலையில், நற்பணி இயக்க அலுவலகத்தில் ‘துணிவு’ படத்தின் ரசிகர் மன்ற டிக்கெட் கடந்த 2 நாட்களுக்கு மேலாக விற்பனை செய்யப்பட்டு வந்தது.

இந்த நிலையில், நேற்று இரவு சுரேஷ்குமார் அலுவலகத்தை பூட்டிச்சென்ற நிலையில்,
வழக்கம் போல் அலுவலகத்திற்கு காலையில் வந்து பார்த்தபோது அலுவலக ஷட்டர் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது.

நள்ளிரவில் அலுவலகத்தின் பூட்டை உடைத்து உள்ளே சென்ற மர்ம நபர்கள், அலுவலக மேசையில் இருந்த ‘துணிவு’ படத்தின் 900 டிக்கெட்களையும் லாக்கரில் இருந்த 16,ஆயிரம் ரூபாய் பணத்தையும் திருடிச் சென்றுள்ளனர்.

இந்த நிலையில், அஜித் தலைமை நற்பணி மன்றம் தலைவர் சுரேஷ்குமார் வேலூர் வடக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில், வழக்கு பதிவு செய்த காவல்துறையின்  மர்ம நபர்கள் யார் என்பது குறித்து அந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை வைத்து  விசாரணை நடத்தி தேடி வருகிறனர்.

நாளை அஜித்தின் துணிவு படம் வெளியாக உள்ள நிலையில் டிக்கெட் திருடுபோன  சம்பவம் அஜித் ரசிகர்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.