26.7 C
Chennai
September 24, 2023
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

குவைத்தில் சுட்டுக் கொல்லப்பட்ட தமிழரின் மனைவிக்கு அரசு வேலை – மாவட்ட ஆட்சியர் உறுதி

திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் பகுதியை சேர்ந்தவர் முத்துக்குமரன். இவர் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு குவைத் நாட்டில் குவைத் நாட்டைச் சேர்ந்தவரால் சுட்டுக் கொல்லப்பட்டார். அதனை குவைத் அரசாங்கமும் உறுதிப்படுத்தியது.

முத்துக்குமரன் குவைத் நாட்டில் சுட்டுக் கொல்லப்பட்டதையும், அவரின் உடலை தமிழகம் கொண்டுவர வேண்டும் என அவரது உறவினர்கள் கோரிக்கை வைத்தனர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

அதன் பிறகு அரசின் முயற்சியால் முத்துக்குமரன்  உடல் அவரது இல்லத்திற்கு கொண்டு வரப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட்டது. இந்த நிலையில் முத்துக்குமரன் இறப்பினால்  அவருடைய மனைவி இரண்டு குழந்தைகளை வைத்துக்கொண்டு தான் வறுமையில் இருப்பதாகவும்,  தனக்கு அரசு வேலை வேண்டுமென நாகை மாவட்டத்திற்கு வருகை தந்த வெளிநாடு வாழ் தமிழர்கள் நலன் துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் இடம் கோரிக்கை வைத்தார்.

அப்போது செஞ்சி மஸ்தான் அவர்கள் முத்துக்குமரன் மனைவி  வித்யா கொண்டு சென்ற மனுவில் அரசு வேலைக்கு பரிந்துரை செய்வதாக எழுதி கொடுத்தார். அதனை இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணனிடம் வித்யா கொடுத்தார் அதற்கு மாவட்ட ஆட்சியர் அரசு வேலை கொடுப்பதற்கு உரிய ஏற்பாடு செய்வதாக உறுதி அளித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:

Share to KooShare to WhatsappShare to PinterestShare to TelegramShare to Print

Related posts

விஜய் ஆண்டனியின் கொலை திரைப்படம் ஜூலை 21 ரிலீஸ்!

Web Editor

போக்குவரத்து துறையை தனியார் மயமாக்கும் அரசு முயற்சியை கைவிட வேண்டும்-தேமுதிக

G SaravanaKumar

கோலாகலமாக கொண்டாடப்பட்ட திருச்சி ஸ்ரீரங்கம் கோயில் யானையின் 45 ஆவது பிறந்தநாள்..

Web Editor