திருவாரூர் மாவட்டம் வெள்ளமதகு பகுதியில் திடீரென கட்டுபட்டை இழந்த அரசு பேருந்து சாலை ஓரத்தில் கவிழ்ந்ததில் பத்திற்க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
திருவாரூர் மாவட்டம் வெள்ளமதகு பகுதியில் இன்றுகாலையில் திருவாரூரில் இருந்து திருச்சி நோக்கி அரசு பேருந்து சென்று கொண்டிருந்தது.அப்போது பேருந்துக்கு எதிரே டாடாஏஸ் வாகனம் ஒன்று வந்து கொண்டிருந்தது.அதனை கண்ட பேருந்து ஓட்டுநர் டாடாஏஸ் வாகனத்திற்கு வழிவிட முயன்றார்.அப்போது எதிர்பாரத விதமாக அரசு பேருந்து கட்டுப்பாட்டை இழந்து சாலையின் ஓரத்தில் நிலை தடுமாரி கவிழ்ந்தது.இதில் பேருந்தில் பயணித்த பயணிகள் சுரேஷ்(47),நித்யா(20),பிரகதீஸ்(70),செல்வாம்பாள்(63)
உள்ளிட்டோர் படுகாயமடைந்தனர்.
பேருந்தை கவிழ்ந்ததை கண்ட அக்கம்பக்கத்தினர் பதறிபோய் உடனடியாக பேருந்துக்குள் காயத்துடன் போராடிகொண்டிருந்தவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம்
சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இதுகுறித்து தகவல் அறிந்த கொரடாச்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
—வேந்தன்







