மரக்காணம் ஆஞ்சநேயர் கோயிலில் லட்சதீபத்திருவிழா-திரளான பக்தர்கள் பங்கேற்பு!

திண்டிவனம் மரக்காணம் பகுதியில் உள்ள அனுமன் ஆலயத்தில் லட்ச தீபங்களை ஏற்றி பக்தர்கள் வழிபாடு நடத்தினர்.  விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பேருந்து நிலையத்தில் அமைந்துள்ள ஸ்ரீ சாந்த சொரூப ஆஞ்சநேயர் ஆலயம் மிகவும் பிரசித்தி…

திண்டிவனம் மரக்காணம் பகுதியில் உள்ள அனுமன் ஆலயத்தில் லட்ச தீபங்களை ஏற்றி பக்தர்கள் வழிபாடு நடத்தினர். 

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பேருந்து நிலையத்தில் அமைந்துள்ள ஸ்ரீ சாந்த சொரூப ஆஞ்சநேயர் ஆலயம் மிகவும் பிரசித்தி பெற்ற கோவிலாகும். இந்த கோவிலில்
சித்திரை 1 ஆம் தேதி நடக்கும் லட்ச தீப திருவிழா மிகவும் கோலாகலமாக கொண்டாடப்படும் ஒரு திருவிழாவாகும்.

காலை ஆஞ்சினேயருக்கு சந்தனக்காப்பு மற்றும் மலர் அலங்காரத்துடன் சிறப்பு
பூஜைகள் நடைபெற்றது. மாலை 6 மணியளவில் பொதுமக்கள் லட்ச தீப திருவிழாவில் கலந்து கொண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட தீபங்களை ஏற்றி வழிபாடு செய்தனர். அதிக
அளவில் பொதுமக்கள் திரண்டதால் மரக்காணம் காவலர்கள் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

— ரெ.வீரம்மாதேவி

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.