அரசியலில் நிரந்தர நண்பர்களும் கிடையாது, எதிரிகளும் இல்லை- அண்ணாமலை

அரசியலில் நிரந்தரமான நண்பர்களும் கிடையாது. நிரந்தரமான எதிரிகளும் கிடையாது என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.  சென்னை விமான நிலையத்தில் இருந்து டெல்லி செல்லும் முன் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை…

அரசியலில் நிரந்தரமான நண்பர்களும் கிடையாது. நிரந்தரமான எதிரிகளும் கிடையாது என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். 

சென்னை விமான நிலையத்தில் இருந்து டெல்லி செல்லும் முன் தமிழக பாஜக தலைவர்
அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், மக்கள் பிரச்னை குறித்து டெல்லியில் என்ன பேசினாலும் வெளியே பேசுவது என் கடமை. காலமும், நேரமும் வரும் போது பேசுவேன். உள்கட்சியில் நடக்கும் விசயங்களை பேசுவது சரியாக இருக்காது. உங்களிடம் சொல்ல வேண்டிய தகவலை கண்டிப்பாக பேசுவேன். கர்நாடக தேர்தல் பணியில் இருப்பதால் 2 நாளில் பட்ஜெட் குறித்து விரிவாக பேசுவேன் என்று கூறினார்.

இதையும் படிக்கவும்: சட்டப்பேரவையில் ஓபிஎஸ்-க்கு பேச அனுமதி அளித்த விவகாரம்; அதிமுகவினர் கூச்சல், குழப்பம்- வெளிநடப்பு

தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு எப்படி இருக்கிறது என்றால் நடிகர் வடிவேல் நடித்த 23ம் புலிகேசி படம் தான் நினைவுக்கு வருகிறது. முதலமைச்சர் தினமும் சமூக வலைதளத்தில் யார் தவறாக பேசுகின்றனர் என கேட்டு அதிகாலையில் கைது செய்வதில் தான் அரசு முனைப்பு காட்டுகிறது. பெண்கள், குழந்தைகள் மீது வன்மத்தை காட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. தமிழக முதலமைச்சருக்கு சமூக வலைதளத்தில் வரும் கருத்துகள் முள்போல் குத்துகிறது. தமிழகத்தில் கொலை, கொள்ளை சம்பவங்கள் அதிகமாக தான் இருக்கிறது. 2021 ஆண்டை விட 2022ம் ஆண்டு முதல் அதிகரித்துவிட்டது.

அரவக்குறிச்சி தொகுதியில் செலவு செய்தது குறித்து அரசு போலீசார் கர்நாடகவிற்கு அனுப்பட்டும். ஆட்சியே அவர்களிடம் இருக்கும் போது நான் என்ன பதில் சொல்ல வேண்டி உள்ளது. வருவாய்த் துறை அதிகாரிகள், ஆட்சியர், உளவுத் துறை உள்பட முழு அரசு அதிகாரிகளை அண்ணாமலை மீது ஏவி விட்டு சொத்து எவ்வளவு, கர்நாடகவில் 9 ஆண்டுகள் பணியில் இருந்த போது ஒரு பைசா லஞ்சம் வாங்கினானா என்பதை தேடி பிடித்து வந்து சொல்ல சொன்னால் அதற்கு பதிலளிக்க தயாராக இருக்கிறேன். நல்லதை நோக்கி போகிறேன் என்பதால் தினமும் தாக்குதல் செய்கின்றனர்.

கூட்டணி கட்சி தலைவர்கள் விமர்சனம் செய்வதை நல்லதாக பார்க்கிறேன். பாஜக வளர்ச்சியை ரசிக்க விரும்புவில்லை என்பதை பார்க்கிறேன். கூட்டணி கட்சி யாராக இருந்தாலும் பாஜகவை வளர்க்க வேண்டும் என நினைத்தால் முட்டாள்கள். அவர்கள் பெரும் தலைவர்கள். அரசியலை பொறுத்த வரை யாரும் நண்பர்கள் அல்ல. இதை எப்போ புரிந்து கொள்கிறோமோ அப்போது தான் பாஜக வளர்ச்சி. அரசியலில் நிரந்தரமான நண்பர்களும் கிடையாது. நிரந்தரமான எதிரிகள் கிடையாது. அவரவர் கட்சிகளை வளர்க்க தான் இருக்கிறோம். அவர்கள் கட்சியை வளர்ச்சியை நாங்கள் நிறுத்துகிறோம் என்ற கவலை இருக்கிறது. அது தவறு கிடையாது. தனித்து போட்டியிடுவது என்பது எங்களுக்கும் தமிழக மக்களுக்கும் இடையே உள்ள பிரச்னை என பேசினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.