தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து பள்ளி கல்லூரிகளிலும் இன்று போதை விழிப்புணர்வு பிரச்சாரம் நடக்கவிருக்கும் நிலையில் நேற்று இரவு கரூர் மாவட்டத்தில் மூன்று மாணவிகள் மது போதையில் விழுந்து கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதில் ஒரு மாணவி ஒயின் அருந்திவிட்டு வீட்டிற்குச் சென்றதாகவும் மற்ற இரு மாணவிகள் ஒயின் அருந்திவிட்டு பேருந்தில் பசுபதிபாளையம் சர்ச் கார்னர் பகுதிக்குச் சென்று அங்கு வாந்தி எடுத்து மயக்க நிலையில் கிடந்தனர். அதனை கண்ட அப்பகுதி மக்கள் காவல் நிலையத்திற்க்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து வந்த போலீசார் மாணவிகளை மகளிர் காவல் நிலையத்திற்கு அனுப்பிவைத்து பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர். மாணவிகளுக்கு அறிவுரையும் வழங்கினர்.





