விஷால் நடிப்பில் உருவாகி வரும் மார்க் ஆண்டனி திரைப்படத்தின் படப்பிடிப்பின் போது மீண்டும் நடிகர் விஷாலுக்குப் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
வீரமே வாகை சூடும் படத்திற்குப் பிறகு விஷால் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் லத்தி த்ரில்லர் போலீஸ் கதைக்களத்தில் உருவாகும் இப்படத்தை அறிமுக இயக்குநர் வினோத் இயக்கி வருகிறார். இந்த படத்தில் சி.முருகானந்தம் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். ராணா தயாரிப்பு நிறுவனம் இந்த படத்தைத் தயாரிக்கிறது. இந்த படத்திற்கு விஷாலின் 33வது படமாக உருவாகும் புதிய படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்குகிறார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
மார்க் ஆண்டனி என்ற தலைப்பில் உருவாகும் இந்த படத்தை ‘எனிமி’ படத்தைத் தயாரித்த மினி ஸ்டுடியோ நிறுவனம் தயாரிக்கிறது. இந்தப் படத்தில் நடிகர் எஸ்ஜே சூர்யா வில்லனாக நடிக்கவுள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என 5 மொழிகளில் பான் இந்தியா படமாக இப்படம் உருவாக உள்ளது.
அண்மைச் செய்தி: ‘கூகுள் ஸ்லைடில் கேள்வி பதில் பகுதியை எப்படித் தொடங்குவது?’
இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இன்று காலை நடைபெற்ற படப்பிடிப்பின் போது நடிகர் விஷாலுக்குப் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக தற்போது மார்க் ஆண்டனி படத்தின் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. சில வாரங்களுக்கு முன்பு நடைபெற்ற லத்தி படத்தின் சண்டைக் காட்சிகளின் படப்பிடிப்பின் போது விஷால் காயமடைந்த நிலையில் அவர் மீண்டும் காயமடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.