தேசிய நல்லாசிரியர் விருது பெற்றவர்களை நாளை டெல்லியில் பிரதமர் மோடி நேரில் சந்தித்து கலந்துரையாடுகிறார்.
இந்தியாவின் குடியரசுத் தலைவரும், முன்னாள் ஆசிரியருமான டாக்டர் ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளைக் கொண்டாடும் விதமாக செப்டம்பர் 5ம் தேதி ஆண்டுதோறும் ஆசிரியர் தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நாளில் சிறந்த ஆசிரியர்களுக்கு மத்திய அரசு சார்பில் தேசிய நல்லாசிரியர் விருதுகள் வழங்கி கவுரவிக்கப்படும்.
தங்களது அர்ப்பணிப்பு மற்றும் கடின உழைப்பால் பள்ளிக் கல்வியின் தரத்தை மேம்படுத்தியது மட்டுமல்லாமல், மாணவர்களின் வாழ்வையும் வளமாக்கிய, நாட்டின் தலைசிறந்த ஆசிரியர்களின் தனித்துவம் வாய்ந்த பங்களிப்பை கொண்டாடுவது, கௌரவிப்பது ஆகியவை தேசிய ஆசிரியர் விருதின் நோக்கமாகும்.
தொடக்கநிலை மற்றும் உயர்நிலை பள்ளிகளில் பணிபுரியும் சிறந்த ஆசிரியர்களுக்கான மக்களின் அங்கீகாரத்தை தேசிய ஆசிரியர் விருது அளிக்கிறது. இந்த விருதுக்காக இந்த ஆண்டு இணையதளம் வாயிலாக விறுவிறுப்பாகவும் வெளிப்படைதன்மை வாயிலாகவும் நடைபெற்ற மூன்று கட்ட நடைமுறைகளில் நாடு முழுவதிலுமிருந்து 45 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் தேசிய ஆசிரியர் தினம் நாளை கொண்டாடப்படுகிறது. இதையயொட்டி நாளை மாலை 4.30 மணிக்கு டெல்லியில் தேசிய விருது பெறும் 45 ஆசிரியர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடுகிறார். தமிழ்நாட்டைச் சார்ந்த ராமச்சந்திரனுடனும் பிரதமர் மோடி கலந்துரையாட உள்ளார்.
மேலும் தேசிய விருது பெற்றுள்ள 45 பேருக்கும் நாளை டெல்லியில் நடைபெறும் நிகழ்வில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு விருது வழங்கி கௌரவிக்கிறார்.







