31.9 C
Chennai
May 30, 2024
முக்கியச் செய்திகள் குற்றம்

விசாரணை கைதியின் மர்ம மரணம்; உறவினர்கள் ஆர்ப்பாட்டம்

திருவண்ணாமலை அருகே விசாரணை கைதியின் மர்ம மரணத்திற்கு நியாயம் வழங்க கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு உறவினர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவண்ணாமலை மாவட்டம், இளையாங்கண்னி கிராமத்தை சேர்ந்த தங்கமணி என்பவரை கடந்த 2 நாட்களுக்கு முன்பு சாராயம் விற்பனை புகார் தொடர்பாக, கலால் காவல் நிலைய போலீசார் விசாரணைக்கு அழைத்து சென்றுள்ளனர். பின்னர் திருவண்ணாமலை கிளை சிறையில் தங்கமணியை போலீசார் அடைத்துள்ளனர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்நிலையில், தங்கமணிக்கு நேற்று திடீரென உடல்நிலை சரியில்லாததால், அவரை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றபோது, அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

அண்மைச் செய்தி: எம்எல்ஏக்களுக்கு டார்கெட்: தேர்தலுக்குத் தயாராகும் ஜெகன்மோகன் ரெட்டி!

இதனை தொடர்ந்து விசாரணை கைதியின் மர்ம மரணத்திற்கு நீதி வழங்க கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு உறவினர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால், திருவண்ணாமலை நோக்கி செல்லும் உறவினர்களை இளையாங்கண்னி கிராமத்திலேயே தடுத்து நிறுத்தி காவல் துறையினர் சமரசம் செய்வதாக புகார் எழுந்துள்ளது.

சமீபகாலமாக விசாரணை கைதிகள் மர்ம மரணம் அடைவதாக ஒரு குற்றச்சாட்டு எழுந்துவரும் நிலையில் மீண்டும் ஒரு மரணம் நிகழ்ந்துள்ளது அதிர்ச்சியளிப்பதாக சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading