கன்னியாகுமரி மாவட்டத்தில் மிக கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
வடகிழக்கு பருவமழை காரணமாக, தமிழ்நாட்டில் கனமழை பெய்து வருகிறது. இதனால் பல இடங்களில் ஏரி, குளங்கள் நிரம்பியுள்ளன. ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள் ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்துவரும் கனமழையால், 200-க்கும் மேற்பட்ட கிராமங்களை வெள்ளம் சூழ்ந்துள்ளது. கடந்த நான்கு நாட்களாக பெய்து வரும் கனமழையில், நாகர்கோவில், குழித்துறை, வைக்கலூர், மங்காடு, திக்குறிச்சி போன்ற பகுதிகளில் உள்ள வீடுகளில் மழை நீர் சூழ்ந்துள்ளது. முக்கிய சாலைகளில் தண்ணீர் வடியாமல் உள்ளதால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
பெரும்பாலானோர் வீடுகளில் சிக்கியுள்ளனர். அவர்களை மீட்பு குழுவினர் மீட்டு வருகின்றனர். பல ஆயிரக்கணக்கான ஏக்கர் விளை நிலங்களில் தண்ணீர் தேங்கி யுள்ளதால் பயிர்கள் சேதமடைந்து பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் மிக கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அங்கு ஒரு சில இடங்களில் இன்று அதி கனமழை பெய்யும் என்றும் நீலரிகி, திண்டுக்கல், தேனி, திருப்பூர், உள்ளிட்ட மாவட்டங் களில் ஒரிரு இடங்களில் கன மழை முதல் மிக கனமழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 19 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று தெரிவித்துள்ள வானிலை ஆய்வு மையம், சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் கூறியுள்ளது.