சேலத்தில் நகைக்கு அதிக வட்டி தருவதாக கூறி பல கோடி ரூபாயை சுருட்டி கொண்டு தப்பியோடிய நகைக்கடை உரிமையாளரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
சேலத்தில், தனியார் நகைக்கடையில் பணம் மற்றும் தங்கத்தை டெபாசிட் செய்தால், ஒரு சவரன் தங்கத்திற்கு மாதம் தோறும் 600 ரூபாய் வட்டி வழங்கப்படும் என அறிவிப்பு வெளியானது. இதையடுத்து, ஏராளமானோர் இதில் பணம் மற்றும் நகைகளை டெபாசிட் செய்துள்ளனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிலையில் , சில மாதங்களாக அனைவருக்கும் முறையாக வட்டி பணம் வழங்கி வந்த நகைக்கடை, கடந்த 3 மாதங்களாக வழங்கவில்லை என கூறப்படுகிறது.
இது குறித்து வாடிக்கையாளர்கள் கேட்டு வந்த நிலையில், கடையின் உரிமையாளர் நகை, பணத்தை சுருட்டி கொண்டு தலைமறைவாகி உள்ளார். இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அண்மைச் செய்தி: கடலூரில் உயிரிழந்த சிறுவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 இலட்சம் நிதியுதவி
இதனால் பாதிக்கப்பட்டவர்கள், பொன்னாமாபேட்டை அருகே உள்ள நகைக்கடையின் உறவினர் வீட்டை முற்றுகையிட்டு, பலகோடி ரூபாய் ஏமாற்றியதாக குற்றம்சாட்டினர். தகவலறிந்து வந்த போலீசார் அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி அவர்களை கலைத்தனர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.