மேட்டுப்பாளையம் அருகே காயம்பட்ட காட்டு யானைக்கு கும்கி யானை உதவியுடன் மருத்துவக் குழுவினர் சிகிச்சை அளித்து வருகின்றனர். ஆசன குழாய் வழியாக குளுக்கோஸ் மற்றும் தண்ணீர் அளிக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள ஆதிமாதையனூர் கிராமத்தில் விவசாய நிலத்தில் சுற்றி திரிந்த வாயில் காயம்பட்ட யானையை பிடித்து இன்று வனத்துறையினர் சிகிச்சை அளிக்க முடிவு செய்தனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
எனவே அதற்கு உதவியாக டாப்சிலிப் பகுதியில் இருந்து சின்னத்தம்பி என்ற கும்கி யானை வரவழைக்கப்பட்டு அதன் உதவியுடன் இன்று முத்துகல்லூர் பகுதியில் உள்ள ஒரு விவசாய தோட்டத்தில் வைத்து யானைக்கு மயக்க ஊசி செலுத்தபட்டது. இதனையடுத்து காயம்பட்ட யானைக்கு கால்நடை மருத்துவர்கள் சுகுமார், சதாசிவம் ஆகியோர் சிகிச்சை அளிக்க யானையை பரிசோதித்தனர்.
இதனையடுத்து யானைக்கு வாயில் உள்ள நாக்கு பகுதியில் பெரிய அளவில் காயம் ஏற்பட்டுள்ளது தெரியவந்தது. இதனையடுத்து யானைக்கு சிகிச்சை அளிக்க காயம்பட்ட யானையை கயிறு கட்டி ஒதுக்கு புறமான இடத்திற்கு கொண்டு வந்து முதலுதவி சிகிச்சை அளித்து வருகின்றனர். யானை பிடிபட்ட இடத்திலேயே தற்காலிகமாக நிழலுக்காக சாமியானம் அமைத்து அதில் வைத்து யானைக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
மேலும், யானையின் நாக்கு பகுதியில் பெரிய அளவில் காயம் உள்ளதால் அதற்கு பத்து நாட்களாவது சிகிச்சை அளிக்க வேண்டும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் சம்பவ இடத்திற்கு மாவட்ட வன அலுவலர் அசோக்குமார் தலைமையில் வனத்துறையினர் அதற்கான ஏற்பாடுகளை செய்து வரும் நிலையில் விரைவில் யானையை மேல் சிகிச்சைக்காக டாப்சிலிப் யானை முகாமிற்கு கொன்டு செல்லப்பட உள்ளதாக மருத்துவர்கள் தகவல் தெரிவித்தனர்.
அண்மைச் செய்தி : யானை குட்டியை தாயுடன் சேர்க்க முடியாத நிலை – பொம்மன்,பெள்ளி தம்பதியினர் பராமரிக்க வனத்துறை உத்தரவு
மேலும் தற்போது கால்நடை மருத்துவர்கள் குழு யானைக்கு உணவு உட்கொள்ள முடியாததால் குளுக்கோஸ் மற்றும் நோய் எதிர்ப்புச் சக்தி அளிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். வாய்வழியாக உணவு அளிக்க முடியாது என்பதால் யானையின் ஆசன குழாய் வழியாக குழாய் மூலம் குளுக்கோஸ் அளிக்கப்பட்டு வருகிறது.
மேலும் நோய் எதிர்ப்புச் சக்தி அளிக்க ஆன்டிபயாட்டிக் மருந்துகள் ஊசி மூலம் யானைக்கு செலுத்தப்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து யானைக்கு தண்ணீர் அளித்து வருகின்றனர் தொடர்ந்து உடல்நிலையை கண்காணித்து தொடர் சிகிச்சை அளிக்க வனத்துறையினர் திட்டமிட்டுள்ளனர்.