பண்ருட்டியில் பிரபல நகைக்கடையில் பொருள் வாங்குவது போன்று தங்க நகைக்கு
பதிலாக கவரிங் நகையை வைத்து மோசடியில் ஈடுபட்ட பெண்கள் இருவரை சிசிடிவி காட்சி அடிப்படையில் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கடலூர் மாவட்டம், பண்ருட்டியில் பிரபல நகை கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த நகைக்கடையில் பர்தா அணிந்து கொண்டு பொருள் வாங்குவது போன்று உள்ளே புகுந்த
இரண்டு பெண்கள் தங்க நகைகளை எடுத்து காண்பிக்க சொல்லி உள்ளனர். அப்போது கடையின் ஊழியர்கள் தங்க நகைகளை காட்டிய போது கண்ணிமைக்கும் நேரத்தில் 1½ பவுன் தங்க நகைக்கு பதிலாக கவரிங் நகையை வைத்து விட்டு மின்னல்வேகத்தில் வெளியே தப்பி சென்றுள்ளனர்.
பின்னர் நகைப்பொருட்களை கணக்கெடுத்த ஊழியர்கள் போலியாக கவரிங் நகைகள் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து கடையின் உரிமையாளர்
அருள், பண்ருட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் நகைக்கடையில் பதிவாகி இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில் தங்க நகைகள்
நூதன முறையில் திருடப்பட்டு இருப்பது தெரியவந்தது.
சிசிடிவி காட்சி மற்றும் செல்போன் சிக்னல் அடிப்படையில் பண்ருட்டி டிஎஸ்பி சபியுல்லா தலைமையில் உதவி ஆய்வாளர் தங்கவேல் மற்றும் தனிப்படை போலீசார் சென்னைக்கு சென்ற போது பேருந்து நிலையம், ரயில் நிலையம் காவல் உள்ளிட்ட இடங்களில் ஆய்வு
செய்துள்ளனர்.இந்நிலையில் போலீஸார் சிசிடிவியில் கிடைக்கபெற்ற புகைக்கப்படங்களை முகம் அடையாளம் காணும் அமைப்பில் சோதனை செய்தனர்.
அதில் மயிலாடுதுறை பகுதியை சேர்ந்த அக்காள் -தங்கையான கவிதா(50), ஷீலாதேவி (37) ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர். மேலும் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் சென்னை, கடலூர், விருத்தாசலம், நெய்வேலி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நகைக் கடைகளில் திருட்டு சம்பவத்தில் கைதாகி ஜாமினில் வெளியே வந்திருப்பதும் தெரிய வந்தது. இது சம்பந்தமாக பண்ருட்டி போலீசார் இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.