32.2 C
Chennai
September 25, 2023
முக்கியச் செய்திகள் குற்றம்

அறிவுரை கூறிய அண்ணனை, கத்தியால் குத்தி கொலை செய்த தம்பி!

திருவள்ளூர் பகுதியில் சொந்த அண்ணனையே கத்தியால் குத்திகொலை செய்த சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் அடுத்த குமாரச்சேரி கிராமத்தில் யோகன் மற்றும் ஏசுவா வசித்து வருகின்றனர். இவர்கள் இருவரும் ஆந்திர மாநிலம் நெல்லூரில் கூலி வேலை செய்து வந்துள்ளனர். பின்னர், தம்பி ஏசுவாவுக்கு திருமணமான நிலையில் போதை பழக்கத்துக்கு அடிமையானதால் மனைவி பிரிந்து சென்றுவிட்டார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அண்ணன் யோகன், நெல்லூரிலிருந்து வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது வீட்டில் கஞ்சா போதையில் இருந்த தம்பியை யோகன் தட்டிகேட்டதாக கூறப்படுகிறது. போதை பழக்கத்தை விடும்படி கூறியதால் அண்ணனுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். பின்னர் ஆத்திரமடைந்த ஏசுவா அங்கிருந்த கத்தியால் அண்ணன் கழுத்தில் பலமாக தாக்கியுள்ளார். இதில் நிலைகுலைந்து சம்பவ இடத்திலேயே துடிதுடித்து யோகன் உயிரிழந்துள்ளார்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் ஏசுவாவை போலீசார் கைது செய்தனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:

Share to KooShare to WhatsappShare to PinterestShare to TelegramShare to Print

Related posts

“ரம்மிக்கான அவசர தடை சட்டம் வேண்டும்”

Arivazhagan Chinnasamy

சட்டப்பேரவை கூட்டத்தொடர் நாளை தொடக்கம்: எம்.எல்.ஏக்களுக்கு கமல்ஹாசன் வாழ்த்து

Vandhana

வீட்டுக்குள் புகுந்து நடிகையிடம் கத்திமுனையில் கொள்ளை

EZHILARASAN D

Leave a Reply