குளித்தலை அருகே தெற்குமாடுவிழுந்தான் பாறையில் உள்ள கிராமத்தில் அருள்பாலித்து வரும் ஸ்ரீ இரட்டை விநாயகர், ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி, ஸ்ரீ மாரியம்மன் கோயில்களில் குடமுழுக்கு விழா நடைபெற்றது.
கரூர் மாவட்டம், குளித்தலை அருகே தெற்கு மாடுவிழுந்தான் பாறையில் கிராமத்திலுள்ள பொதுமக்களால் கட்டப்பட்ட ஸ்ரீஇரட்டை விநாயகர், ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி, ஸ்ரீமாரியம்மன் ஆலயங்களில் குடமுழுக்கு விழா அடுத்தடுத்து நடைபெற்றது.
இந்த விழாவிற்கு கடந்த ஜூன் 21 ஆம் தேதி புதன்கிழமை, பெட்டவாய்த்தலை கரும்பாயி அம்மன் காவேரி ஆற்றிலிருந்து பக்தர்கள் தீர்த்தக்குடம் எடுத்துகொண்டு மேளதாளம் முழங்க ஊர்வலமாக கோவில் வந்தடைந்தனர். அங்கு அமைக்கப்பட்ட யாக பூஜைக்கு அனைத்து தீர்த்தங்களும் வைக்கப்பட்டு, ஜூன் 23 ஆம் தேதி தொடர்ந்து ஸ்ரீ மகா கணபதி மூல மந்திர மாலா மந்திர ஜபம் ஹோமம், பூர்ணாஹீதி சதுர் வேதம் , தீபாரதணை நடைபெற்றது.
இதைத் தொடர்ந்து, ஜூன் 24 ஆம் தேதி தொடர்ந்து மங்கள இசை, விநாயகர் வழிபாடு என பல்வேறு பூஜைகள் செய்து, கடம் புறப்படுதலுடன் சிவாச்சாரியார்கள் கோயில் கலஷத்திற்கு புன்னிய தீர்த்த்தை ஊற்றி குடமுழுக்கு விழா அடுத்தடுத்து மூன்று கோயில்களில் நடைபெற்றது. இதன் பிறகு, புன்னிய தீர்த்தங்களை அங்கிருந்த பக்தர்களுக்கும், பொதுமக்களுக்கும் தெளிக்கப்பட்ட பின், அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த குடமுழுக்கு விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
சௌம்யா.மோ
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.