முக்கியச் செய்திகள் கொரோனா

தமிழ்நாட்டில் இன்று 731 பேருக்கு கொரோனா

தமிழ்நாட்டில் புதிதாக 731 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வருகிறது. கடந்த சில வாரங்களாகவே 800க்கும் கீழ் பாதிப்பு பதிவாகிவருகிறது. அந்த வகையில் மக்கள் நல்வாழ்வுத் துறை இன்று வெளியிட்ட செய்திக் குறிப்பில், கடந்த 24 மணி நேரத்தில் 731 பேருக்கு தொற்றுப் பாதிப்பு உறுதியாகியுள்ளது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இதையடுத்து, தமிழ்நாட்டில் கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 27,29,792 ஆக அதிகரித்துள்ளது. தொற்றுப் பாதிப்பில் இருந்து இன்று 753 பேர் குணமடைந்து மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியுள்ளனர். தமிழ்நாட்டில் குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 26,85,203 ஆக அதிகரித்துள்ளது.

தொற்றுப் பாதிக்கப்பட்டவர்களில் 8,070 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா பாதிப்பில் கடந்த 24 மணி நேரத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 36,519 ஆக அதிகரித்துள்ளது. மாவட்டங்களை பொறுத்தவரை சென்னையில் 136 பேருக்கும் கோயம்புத்தூரில் 130 பேருக்கும் தொற்றுப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சென்னையில் தொற்றுப் பாதிப்பு காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

சச்சின் சாதனையை ஜோ ரூட்டால் முறியடிக்க முடியாது: சுனில் கவாஸ்கர்

Web Editor

ஆஸ்கரில் பங்கேற்க வில் ஸ்மித்துக்கு 10 ஆண்டுகள் தடை!

Vel Prasanth

திமுக செயல் தலைவர் TO தமிழ்நாடு முதலமைச்சர்- ஓர் அலசல்

Jayasheeba