முக்கியச் செய்திகள் கொரோனா

தமிழ்நாட்டில் 1,233 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 1,233 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மக்கள் நல்வாழ்வுத் துறை இன்று வெளியிட்ட செய்திக் குறிப்பில், தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 1,233 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 26,85,874 ஆக உயர்ந்துள்ளது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர்களில் 15 பேர் இன்று உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தோர் எண்ணிக்கையும் 35,884 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா தொற்றிலிருந்து ஒரே நாளில் 1,434 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இதுவரை நலம்பெற்றவர்களின் எண்ணிக்கை 26,34,968 ஆக உயர்ந்துள்ளது. தமிழ்நாடு முழுவதும் தற்போது 15,022 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மாவட்டங்களைப் பொறுத்தவரை சென்னையில் 173 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கோவையில் 148 பேருக்கும் தொற்று உறுதியாகியுள்ளது. மற்ற மாவட்டங்களில் 100க்கும் குறைவானோரே தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

தமிழகத்தில் மேலும் 1,803 பேருக்கு கொரோனா பாதிப்பு

G SaravanaKumar

பாஜக உத்தேச வேட்பாளர் பட்டியல் வெளியீடு!

Gayathri Venkatesan

கோடநாடு வழக்கு அடுத்த மாதத்திற்கு ஒத்திவைப்பு

EZHILARASAN D