நேற்று முன்தினம் ராஜ் பவனில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் உரையாற்றிய ஆளுநர் ஆர்.என்.ரவி, காரல் மார்க்ஸின் தத்துவத்தால் நம் நாட்டின் வளர்ச்சி பாதித்தது” என்று கூறியிருந்தார். ஆளுநரின் இத்தகைய கருத்து சர்ச்சையானது. இதை குறிப்பிட்டு பேசிய உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, “அக்கபோர் செய்வதை விடுத்து, தனக்கான வேலையை எப்போது செய்யப் போகிறார் ஆளுநர். ஆளுநடுக்குரிய வேலை என்னவோ அதில் கவனம் செலுத்துவதே, மக்களின் வரிப்பணத்தில் அவர் பெறும் ஊதியத்துக்கு உண்மையானதகாக இருக்கும் என்று சாடியிருந்தார்.
தற்போது பொன்முடியின் கருத்தை விமர்ச்சித்து தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்களை விமர்சித்து, தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வெளியிட்டுள்ள அறிக்கையைப் படித்தேன். வழக்கம் போல, புரட்டும், போலி பெருமிதமும் நிறைந்த திமுகவுக்கே உரித்தான அறிக்கையை, சற்றும் மாறாமல் வெளியிட்டிருக்கிறார் அமைச்சர். பொய்யைத் திரும்பத் திரும்பச் சொன்னால் உண்மை ஆகிவிடும் என்பதும் திமுகவின் ஒரு கொள்கை போலும்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
கடந்த பிப்ரவரி 21 அன்று கார்ல் மார்க்ஸ் குறித்து மாண்புமிகு ஆளுநர் கூறிய கருத்துக்களை, அமைச்சர் பொன்முடி விமர்சித்திருக்கிறார். ஆனால் திமுகவினரின் கொள்கைத் தந்தையான பெரியார், திருச்சியில் 1943 ஆம் ஆண்டு அதே பிப்ரவரி 21 அன்று, “கம்யூனிசம் என்பது இனிப்பு தோய்க்கப்பட்ட விஷ மாத்திரை”என்றும் “இளைஞர்கள் கம்யூனிஸ்ட்களிடம் கவனமாக இருக்க வேண்டும்” என்றும் பேசியிருப்பதாக, தி.க. தலைவர் கி. வீரமணி அவர்கள் எழுதிய ‘Collected works of Periyar EVR’ என்ற புத்தகத்தில் எழுதியிருப்பதற்கு, அமைச்சர் பொன்முடி ஏதேனும் கருத்து சொல்வாரா?
தன் ஒரு மகனை பாராளுமன்ற உறுப்பினராகவும், இன்னரு மகனை கிரிக்கெட் சங்கத் தலைவராக்கியும் அழகு பார்க்கும் அமைச்சர் பொன்முடி, பொதுவுடைமை குறித்துப் பேசுவதெல்லாம், திமுகவுக்கே உரித்தான நகைமுரண். பொதுவுடைமை, பாகுபாடு பாராமை, அனைவருக்கும் சம உரிமை என்றெல்லாம் கார்ல் மார்க்ஸ் கொள்கைகளாகக் கூறும் அமைச்சர், அவரது தொகுதியில் அவரது கட்சி உறுப்பினர்கள் எத்தனை பேருக்கு சம உரிமை கொடுத்திருக்கிறார்?
ஆளுங்கட்சிக் கவுன்சிலரால், ராணுவ வீரர் கொல்லப்பட்டதை தன் அறிக்கையில் ஒரு வழியாக ஒப்புக் கொண்டிருக்கிறார் அமைச்சர் பொன்முடி. ஆனால், அந்தக் கவுன்சிலர் மீது, கட்சி ரீதியாக இன்று வரை எந்த நடவடிக்கையும் எடுக்காமல், கட்சியின் சார்பில் மன்னிப்பு கூடக் கேட்காமல், ஒட்டு மொத்த ராணுவ வீரர்களை அவமானப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். கோவை தற்கொலைப் படை தாக்குதலை சிலிண்டர் வெடிப்பு என்று இன்று வரை சமாளிக்கும் திமுகவினர், தங்கள் சகோதரனை இழந்த நாட்டுப்பற்று மிக்க முன்னாள் ராணுவ வீரர்களின் அறச் சீற்றத்தை மட்டும் பெரிதுபடுத்திக் கொண்டிருக்கிறார்கள்.
அண்மைச் செய்தி: மயிலாடுதுறை மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல்
மாண்புமிகு ஆளுநர், தமிழர்களின் பாரம்பரியம் குறித்தும், திருக்குறள் குறித்தும், சுதந்திரப் போராட்ட வீரர்கள் குறித்தும் பெருமையாகப் பேசுவது, அமைச்சருக்கு பொறுக்கவில்லை. ஆனால் ஜி.யு. போப்பின் திருக்குறள் மொழிபெயர்ப்பு தவறு என்று ஆளுநர் கூறினால், திமுகவினருக்கு உடனே கோபம் வருகிறது. எப்போதெல்லாம், தங்கள் ஆட்சியின் பிரச்சினைகள், சட்டம் ஒழுங்கு தோல்வி உள்ளிட்ட இழிவு நிலை குறித்து மக்கள் கேள்வி எழுப்புகிறார்களோ, அப்போதெல்லாம் ஏதாவது ஒரு வகையில் மக்களைத் திசை திருப்பும் மலினமான முயற்சிகளில் ஈடுபடுவது திமுகவின் வழக்கம். அந்த வகையில் தற்போது ஆளுநர் மேல் குற்றம் சாட்டும் போக்கைத் தொடர்ந்து கொண்டிருக்கிறார்கள். இது போன்ற திசை திருப்பும் வேலைகளை விட்டு விட்டு, சீரழிந்து கிடக்கும் சட்டம் ஒழுங்கிலும், பொதுமக்களைப் பாதிக்கும் மற்ற பிரச்சினைகளிலும் கவனம் செலுத்துமாறு திறனற்ற திமுக அரசை வலியுறுத்துகிறேன். இவ்வாறு தனது அறிக்கையில் அண்ணாமலை கூறியுள்ளார்.