பொன்னியின் செல்வனை தமிழ் சமூகம் கொண்டாடுகிறது! – வந்தியத்தேவன்

பொன்னியின் செல்வனை தமிழ்ச் சமூகம் கொண்டாடி வருகிறது என்றும், பொன்னியின் செல்வன் ஒரு காவியம் என்றும் நடிகர் கார்த்தி புகழாரம் சூட்டியுள்ளார். மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம்ரவி, சரத்குமார், பார்த்திபன், பிரகாஷ்ராஜ், ஐஸ்வர்யா…

பொன்னியின் செல்வனை தமிழ்ச் சமூகம் கொண்டாடி வருகிறது என்றும், பொன்னியின் செல்வன் ஒரு காவியம் என்றும் நடிகர் கார்த்தி புகழாரம் சூட்டியுள்ளார்.

மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம்ரவி, சரத்குமார், பார்த்திபன், பிரகாஷ்ராஜ், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்களின் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான திரைப்படம் ‘பொன்னியின் செல்வன்-1’. இந்த படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.

பொன்னியின் செல்வன் 2ம் பாகம் வரும் 28-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தின் ட்ரெய்லர் மற்றும் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி, ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்தது. இதனிடையே பொன்னியின் செல்வன் 2 ஆம் பாகத்திற்கான ப்ரொமோஷன் பணிகளில் படக்குழு ஈடுபட்டு வருகிறது.

இதையும் படியுங்கள் : 10 படத்துக்கான கஷ்டத்தை பொன்னியின் செல்வனுக்காக அனுபவித்தோம்! – அருண்மொழிவர்மன்

இந்நிலையில், சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தாஜ் கோரமண்டல் நட்சத்திர விடுதியில், நடிகர்கள் விக்ரம், ஜெயம்ரவி, கார்த்தி, நடிகைகள் த்ரிஷா, ஐஷ்வர்யா லட்சுமி, ஷோபிதா ஆகிய பொன்னியின் செல்வன் படக்குழுவினர் செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது பேசிய நடிகர் கார்த்தி, “எத்தனை முறை சந்தித்தாலும் மீண்டும் மீண்டும் நன்றி சொல்லிக் கொண்டே இருக்க வேண்டும். என்னுடைய பயணம் தொடங்கியதில் இருந்து எனக்கு நிறைய சொல்லிக் கொடுத்திருக்கிறீர்கள். இந்த படத்தை இரண்டு, மூன்று தலைமுறை சேர்ந்து எடுத்துள்ளனர். அதேபோல நடிகர்களும் தான்.

பொன்னியின் செல்வனை தமிழ் சமூகம் கொண்டாடி வருகிறது. கல்கிக்கு நன்றி சொல்லி கொள்கிறேன். பொன்னியின் செல்வன் முதல் பாகம் பாகுபலி மாதிரி இருக்கும் என நிறைய பேர் எதிர்பார்த்தனர். அதன் பிறகு இப்படி தான் படம் இருக்கும் என மக்கள் ஏற்றுக்கொண்டனர். இந்த மாதிரி படங்கள் எப்போதாவது தான் வரும். பொன்னியின் செல்வன் ஒரு காவியம்” என்று தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.