முக்கியச் செய்திகள் குற்றம்

ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணன் ஜாமீன் கோரி மனு; நாளை விசாரணை!

பெரியார் சிலையை உடைக்க வேண்டும் எனப் பேசியதாகக் கைதுசெய்யப்பட்ட ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணன் ஜாமீன் கோரி சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

இந்து முன்னணி அமைப்பின் இந்துக்களின் உரிமை மீட்புப் பிரசார பயணம் நிறைவு விழாவை ஒட்டி சென்னை மதுரவாயலில் ஆகஸ்ட் 1-ஆம் தேதி பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில், பங்கேற்ற இந்து முன்னணி மாநில கலை பண்பாட்டுப் பிரிவின் செயலரும், சினிமா ஸ்டண்ட் மாஸ்டருமான கனல் கண்ணன், ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் எதிரே உள்ள பெரியார் சிலையை உடைப்பது குறித்துப் பேசியிருந்தார். இதுதொடர்பாக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் மாவட்டச் செயலர் குமரன் சென்னை மாநகர காவல் ஆணையரகத்தில் அளித்த புகாரில், இரு பிரிவினரிடையே கலவரத்தை ஏற்படுத்தும் வகையில் பேசிய கனல் கண்ணன் மீதும், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்திருந்தார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்த புகார் தொடர்பாகக் கனல் கண்ணன் மீது கலகம் செய்யத் தூண்டிவிடுதல், அமைதியைச் சீர்குலைக்கும் வகையில் செயல்படுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் சென்னை சைபர் க்ரைம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கில் அவரது முன் ஜாமின் மனுவைச் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம், ஆகஸ்ட் 11ஆம் தேதி தள்ளுபடி செய்த நிலையில், புதுச்சேரியில் பதுங்கியிருந்த கனல் கண்ணனை ஆகஸ்ட் 15-ஆம் தேதியன்று கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

அண்மைச் செய்தி: ‘பட்டியலினத்துக்கு மட்டும் பாடுபட்ட தலைவரா இவர்? சமூக சீர்திருத்த மருத்துவர் திருமாவளவன் கதை’

ஆகஸ்ட் 26-ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்ட கனல் கண்ணன் ஜாமீன் கோரி எழும்பூர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். அந்த மனு நீதிபதி கிரிஜா ராணி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது கனல் கண்ணனுக்கு ஜாமீன் வழங்க ஆட்சேபனை தெரிவித்து, புகார்தாரர் த.பெ.தி.க. குமரன் தரப்பில் இடையீட்டு மனுவும் தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து இரு மனுக்களையும் நாளை விசாரிப்பதாக நீதிபதி தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

இந்திய டேக்வாண்டோ கூட்டமைப்பு தலைவரானார் ஐசரி K. கணேஷ்

EZHILARASAN D

மீன்பிடித் திருவிழா: தந்தையின் கண்முன் உயிரிழந்த மகன்

Web Editor

வைகை அணையிலிருந்து நீர் திறப்பு!

Vandhana