திருச்செங்கோடு அருகே அரசு பேருந்தில் மாணவர்களை ஏற்றி செல்வதில்லை என்றும், பேருந்தில் நடத்துனர் தரக்குறைவாக திட்டுவதாகவும் கூறி மாணவர்கள் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பகுதியில், திருச்செங்கோடு அரசினர் ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் உள்ளது. அந்த பள்ளியில் கீழேரிப்பட்டி பகுதியில் இருந்து 100க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர்.
கீழேரிப்பட்டியிலிருந்து மாணவர்களுக்கென சிறப்பு பேருந்து இயக்கப்பட்டு வருகிறது. இன்று அந்த பேருந்து குறித்த நேரத்திற்கு வராததால் பள்ளிக்கு செல்ல மாணவர்களுக்கு காலதாமதமானதாலும், அந்த வழியில் வழக்கமாக இயங்கி வரும் 8 எண் அரசு பேருந்தில் மாணவ மாணவிகள் ஏற முயன்ற போது பேருந்தில் ஏற்றாமல் நடத்துநர் தரக் குறைவாக திட்டியதாலும் மாணவர்கள் திடீர் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர் .
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதனால் திருச்செங்கோடு குமாரபாளையம் ரோட்டில் 20 நிமிடம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த திருச்செங்கோடு நகர போலீசார் விரைந்து வந்து மாணவர்களை சமாதானப்படுத்தியதையடுத்து சாலை மறியல் கைவிடப் பட்டது.
இது குறித்து மாணவி மௌனிகா ஸ்ரீ மற்றும் வசந்தி என்பவர்கள் செய்தியாளர்களிடம் கூறியதாவது: வழக்கமான பள்ளிக்கு செல்லும் நேரத்தில் விடப்படும் சிறப்பு பேருந்து சில நேரங்களில் காலதாமதமாக வருகிறது. அவ்வாறு வரும்போது இந்த பகுதி வழியாக செல்லும் எட்டாம் எண் மற்றும் இ ஐந்து என்ற எண் கொண்ட பேருந்துகளில் மாணவ மாணவிகளாகிய நாங்கள் ஏறினால் நடத்துனர்கள், வேலைக்கு செல்பவர்களுக்கு தான் இடம் இலவசமாக வரும் உங்களுக்கு சிறப்பு பேருந்தில் தான் இடம் எனக் கூறி இறக்கி விடுகிறார்கள். பள்ளிக்கு நேரமாகிவிட்டது நாங்கள் செல்ல வேண்டும் என கூறினால் தகாத வார்த்தைகளால் திட்டுகிறார்கள் செருப்பு மூஞ்சிக்கு வந்து விடும் என கூறுகிறார்கள் நாங்கள் பள்ளிக்கு செல்ல காலதாமதம் ஆனால் ஆசிரியர்கள் திட்டுகிறார்கள் காலையில் சென்றால் மாலை வரை வீடு திரும்ப நேரம் ஆகிறது பேருந்துகளை நம்பி செல்ல வேண்டி இருப்பதால் எங்களுக்கு சரியான நேரத்தில் பேருந்துகளை இயக்க வேண்டும் என கூறினார்கள் மாணவ மாணவிகளின் இந்த திடீர் சாலை மறியலில் கீழேரிப்பட்டி பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.