நாமக்கல்லில் இருந்து முசிறி வரை 4 வழிச்சாலை அமைக்க 104 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியுள்ள மத்திய அரசுக்கு திமுக எம்.பி ராஜேஷ்குமார் நன்றி தெரிவித்துள்ளார்.
நாமக்கல் – திருச்சி சாலையானது தற்போது இருவழிச்சாலையாக உள்ளது. 92 கிலோ மிட்டர் கொண்ட இந்த சாலையில் அதிகளவு வாகனங்கள் சென்று வருவதால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுவதாக புகார் எழுந்தது. இந்நிலையில், நாமக்கலில் இருந்து முசிறி வரையிலான 62 கிலோ மீட்டர் சாலையை முதல்கட்டமாக 4 வழி சாலையாக தரம் உயர்த்த வேண்டும் என மாநிலங்களவையில் மத்திய போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரியிடம் திமுக எம்.பி ராஜேஷ்குமார் வலியுறுத்தினார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அண்மைச் செய்தி: குறிப்பிட்ட மதத்திற்கு எதிராக பாஜக செயல்படவில்லை: மாநில தலைவர் அண்ணாமலை
இதன்படி, நாமக்கல் – முசிறி வரையிலான சாலையை 4 வழிச்சாலையாக தரம் உயர்த்த 104 கோடியே 54 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்படுவதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய திமுக எம்.பி ராஜேஷ்குமார், மத்திய அமைச்சருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
மேலும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், 4 வழிச்சாலைக்கான பணிகள் விரைவில் தொடங்கும் எனவும் அவர் கூறினார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.