29.2 C
Chennai
May 20, 2024
முக்கியச் செய்திகள் குற்றம்

பேருந்து நிலையத்தில் மாணவர்கள் தகராறு; 7 பேரிடம் விசாரணை

செங்குன்றம் பேருந்து நிலையத்தில் இரண்டு கல்லூரிகளை சேர்ந்த மாணவர்கள் தகராறில் ஈடுபட்ட விவகாரம் தொடர்பாக, 7 பேரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சென்னை செங்குன்றம் பேருந்து நிலையத்தில், பேருந்திற்காக நின்றுக் கொண்டிருந்த தனியார் கல்லூரி மாணவர்களை, மற்றொரு தனியார் கல்லூரியை சேர்ந்த மாணவர்கள் கிரிக்கெட் மட்டையால் தாக்கியுள்ளனர். அப்போது ஏற்பட்ட தகராறில் மாணவர் ஒருவரின் பல் உடைந்துள்ளது. மேலும், அங்கிருந்த பேருந்து ஒன்றின் கண்ணாடியும் உடைக்கப்படுள்ளது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இச்சம்பவத்தால் அங்கு இருந்த பயணிகள் அச்சத்துடன் நாலாபுறமும் உயிரைகாப்பாற்ற சிதறி ஓடியதாக சொல்லப்படுகிறது. மேலும், இந்த தகராறில் ஈடுபட்ட இருகல்லூரியை சேர்ந்த 7 பேரை காவல் நிலையம் அழைத்து சென்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், கடந்த சில ஆண்டுகளாகவே மாணவர்களுக்குள் கோஷ்டி மோதல் இருந்து வருவதாகவும் கூறப்படுகிறது.

அண்மைச் செய்தி: ‘சப்பரத் திருவிழாவில் உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு நிவாரண உதவி – முதலமைச்சர்’

சமீப காலமாகவே மாணவர்கள் மத்தியில், மோதல் போக்கு அதிகரித்து வருவது என்பது வருத்தம் தரக்கூடியதாக உள்ளது என சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவிக்கின்றனர். மேலும், காவல்துறை விரைந்து உடனடியாக இதுபோன்ற குற்ற சம்பவங்களை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading