சென்னை அடுத்த குன்றத்தூர் அருகே குடும்ப தகராறில் விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் தொடர்புடைய 4 பேர் அம்பத்தூர் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளனர்.
குன்றத்தூர் அடுத்த தரப்பாக்கம், பெருமாள் கோயில் தெருவை சேர்ந்தவர் அதீஷ். 29 வயதான இவர் விடுதலை சிறுத்தைகள் கட்சியில் ஆலந்தூர் சட்டமன்ற தொகுதி துணை அமைப்பாளராக இருந்து வருவதோடு, தனியார் நிறுவனத்திலும் வேலை செய்து வந்தார். இன்று அதிகாலை இவரது அண்ணன் மகன்களான சுகாஷ்(25) மற்றும் சுனில்(22) ஆகிய இருவரும் அதீஷிடம் தகராறு செய்துள்ளனர். தகராறு முற்றிய நிலையிைல் மறைத்து
வைத்திருந்த கத்தியால் அதீஷை வெட்டினர்.
அப்போது அதனை தடுக்க வந்த அதீஷின் அண்ணன்கள் ஆன முரளி(33) மற்றும் சுகுமார்(38) உள்ளிட்டோருக்கும் வெட்டு காயம் ஏற்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது உறவினர்கள் அவர்களை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். அவரது அண்ணன்கள் இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இது குறித்து அறிந்த சம்பவ இடத்திற்க்கு விரைந்து வந்த குன்றத்தூர் போலீசார் இறந்து போன அதீஷின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவத்திற்கு காரணமான அதீஷின் அண்ணன் மகன்களான சுகாஷ், சுனில் ஆகிய இருவரையும் தீவிரமாக தேடி வந்தனர்.
இந்த நிலையில், குடும்பத் தகராறு காரணமாக சித்தப்பாவை வெட்டி கொலை செய்த வழக்கில் சுனில் வயது 20, தினேஷ் வயது 21, ஜெயபிரகாஷ் வயது 19 ,சுபாஷ் வயது 25 ஆகிய நான்கு பேரும் அம்பத்தூர் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது.
- பி.ஜேம்ஸ் லிசா







