31.4 C
Chennai
May 31, 2024
முக்கியச் செய்திகள் தமிழகம்

இறந்து பிறந்த குழந்தை; மருத்துவமனையை முற்றுகையிட்ட உறவினர்கள்

திருத்தணி அரசு மருத்துவமனையில் குழந்தை இறந்து பிறந்ததால் பெண்ணின் உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அடுத்த அகூர் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் புஷ்பநாதன் செம்பருத்தி தம்பதியினர். திருமணமாகி 7 ஆண்டுகளாக குழந்தை இல்லாத நிலையில் தற்போது பிரசவத்திற்காக திருத்தணி அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்நிலையில், மருத்துவர்கள் 3 நாட்களாக அழைக்கழித்ததால் குழந்தை இறந்து பிறந்ததாக கர்பிணி பெண்ணின் உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதையடுத்து கர்ப்பிணி பெண்ணிற்கு முறையான சிகிச்சை அளிக்க வில்லை என பெண்ணின் உறவினர்கள் தலைமை மருத்துவரிடம் புகார் அளித்துள்ளனர்.

இதையடுத்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினருக்கும், செம்பருத்தியின் உறவினர்களுக்குமிடையே வாக்குவாதம் தொடர்ந்ததால் திருத்தணி அரசு மருத்துவமனை பரபரப்பாக காணப்பட்டது.

முறையான சிகிச்சை அளிக்காததால் தான் குழந்தை இறந்து பிறந்ததாக தலைமை மருத்துவர் ஆனந்தகுமாரிடம் செம்பருத்தியின் உறவினர்கள் கொடுத்த புகாரின் பேரில் விசாரணைக்குப் பின் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்ததையடுத்து உறவினர்கள் அங்கிருந்து சென்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading