ஸ்ரீபெரும்புதூரில் ராஜீவ் காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு நிறுவனத்தில், தேசிய
அளவிலான கணினி அறிவியல் துறை சார்பில் மாநாடு நடைபெற்றது.
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் ராஜீவ் காந்தி தேசிய இளைஞர்
மேம்பாட்டு நிறுவனம் செயல்படுகிறது. இதில் கேரளா ஆந்திரா உள்ளிட்ட மாநிலத்தைச்
சேர்ந்த ஏராளமான மாணவர்கள் படித்து வருகின்றனர்.
இதில் தேசிய இளைஞர் மேம்பாட்டு கணினி அறிவியல் ஒருங்கிணைந்த மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டின் தொடக்க விழா, நிறுவன வளாகத்தில் நடைபெற்றது.
இதில் சிறப்பு விருந்தினராக உத்தரகாண்ட மாநிலத்தின் தேசிய தொழில்நுட்ப
கழகத்தின் இயக்குநர் லலித்குமார் அவஸ்தி கலந்து கொண்டு குத்துவிளக்கு ஏற்றி
தொடங்கி வைத்தார்.
அப்போது பேசிய அவர், உயர்கல்வி நிறுவனங்களில் கணினி அறிவியல் துறையில்
மாநாடுகள் நடத்தப்படுவது மிகவும் அவசியம் என்று வலியுறுத்தினார்.
மேலும் இவ்வளவு வேகமாக மாறி வரும் துறையில் கணினி அறிவியல் துறையில் என்ன நடக்கிறது என்பதை மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் ஆசிரியர்கள் முழுமையான முறையில் அறிந்து கொள்வதற்கு இந்த மாநாடு பயனளிக்கும் என்று அவர் சுட்டிக் காட்டினார்.
தொடர்ந்து இந்த மாநாட்டிற்கு பல்வேறு கல்வி நிறுவனங்களின் மாணவர்கள் மற்றும்
அறிஞர்களிடமிருந்து மொத்தம் 21 கட்டுரைகள் மற்றும் சுவரொட்டி விளக்கப்பட
காட்சிகள் முழுமையான மதிப்பாய்வுக்குப் பிறகு ஏற்றுக் கொள்ளப்பட்டன. இந்த மாநாட்டிற்காக சமர்ப்பிக்கப்பட்ட ஆய்வு கட்டுரைகளைப் பேராசிரியர் லலித் குமார் அவஸ்தி மற்றும் பேராசிரியர் சஞ்சீவ் குமார் ஆகியோர் புத்தக வடிவில் வெளியிட்டனர்.
—-ரெ.வீரம்மாதேவி
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்