தமிழ்நாடு சட்டப்பேரவை தலைவர் அப்பாவு நடுநிலையோடு இல்லாமல் அரசியல் ரீதியாக செயல்படுகிறார் என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி துணைத்தலைவராக ஆர்.பி.உதயகுமாரை அறிவிக்க வேண்டும் என கூறி அதிமுக எம்எல்ஏக்கள் முழுக்கமிட்டனர். இதையடுத்து, அவர்கள் பேரவையில் இருந்து வெளியேற்றப்பட்டதும், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதையடுத்து வெளியேவந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய எடப்பாடி பழனிசாமி, அதிமுக துணைத்தலைவர் தேர்ந்தெடுக்கப்பட்டதை கையெழுத்திட்டு சபாநாயகரிடம் கடந்த 2 மாதத்திற்கு முன்பே கொடுத்துவிட்டோம். மேலும் நேற்று முன்தினம் நினைவூட்டல் கடிதமும் வழங்கப்பட்டது. ஆனால் இன்று வரை அதில் நிலையான முடிவை சபாநாயகர் எடுக்கவில்லை.
இதன்மூலம் நடுநிலையோடு செயல்படவேண்டிய சபாநாயகர் அப்பாவு அரசியல் ரீதியாக செயல்படுவதை பார்ப்பதாகவும், மரபு, மாண்பு சட்டப்பேரவை தலைவர் மூலம் நிராகரிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் குற்றம்சாட்டினார். திமுக தலைவர் ஆலோசனையின்படி சட்டப்பேரவைத்தலைவர் செயல்படுகிறார். எங்களுடைய நியாயத்தை பட்டியலிட்டு கொடுத்துள்ளோம். அரசியல் ரீதியாக அதிமுகவை எதிர்கொள்ள முடியாத திமுக தலைவர் கொல்லைப்புறமாக சட்டப்பேரவைத்தலைவர் மூலமாக பழிவாங்க பார்க்கிறார்.
இதன் மூலம் திமுகவிற்கு ஆதரவாக எங்கள் கட்சியின் உயர் பொறுப்பாளர் செயல்படுகிறார் என்பது உண்மையாகிவிட்டது. ஓபிஎஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்கப்பட்டார் என்ற தீர்மானம் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்டது.நீதிமன்ற தீர்ப்பை சபாநாயகர் மதிக்கவில்லை. ஜெயலலிதா மரணம் தொடர்பாக நாங்கள்தான் ஆணையம் அமைத்தோம். சப்பைக்கட்டு கட்டவே இந்தி எதிர்ப்பு, இருமொழிக்கொள்கையையே அதிமுக கடைபிடிக்கும். மக்களிடம் கொந்தளிப்பை கட்டுப்படுத்த முடியாமல் முதலமைச்சர் திணறி வருகிறார். திமுகவின் அராஜகத்தை அந்த கட்சித்தலைவரே பொதுக்குழுவில் தெளிவுபடுத்தியுள்ளார் என எடப்பாடி பழனிசாமி விமர்சனம் செய்தார்.