சிவகங்கை மாவட்டம் காரைக்குடியை அடுத்த இலுப்பைக்குடி ஸ்ரீநொண்டி முனீஸ்வரர் கோயில் திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற குதிரை மற்றும் மாட்டு வண்டி பந்தயம் பார்வையாளர்களை பரவசமடைய செய்தது.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகேயுள்ள இலுப்பைக்குடியில் அமைந்துள்ளது அருள்மிகு ஸ்ரீநொண்டி முனீஸ்வரர் திருக்கோயில். இக்கோயிலின் 47வது ஆண்டு பூச்செரிதல் திருவிழாவை முன்னிட்டு மாட்டுவண்டி மற்றும் குதிரை வண்டி பந்தயம் நடைபெற்றது. போட்டியில் கலந்து கொள்வதற்கென சிவகங்கை மட்டுமின்றி மதுரை,தஞ்சாவூர் என பல்வேறு பகுதிகளில் இருந்தும் குதிரை மற்றும் மாட்டுவண்டிகள் பங்கேற்றன.
போட்டியில் கலந்து கொண்ட 18 குதிரை வண்டிகள் மற்றும் 8மாட்டு வண்டிகளுக்கு 10 மைல் தூரம் எல்லையாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. போட்டியில் சீறிப்பாய்ந்த குதிரைகள் மற்றும் காளைகளை பார்வையாளர்கள் பரவசத்துடன் கண்டுகளித்தனர். போட்டியின் இறுதியில் வெற்றி பெற்ற மாட்டு வண்டிகள் மற்றும் குதிரைகள்,அதன் உரிமையாளர்களுக்கு ரொக்கப்பரிசுகள் வழங்கப்பட்டன.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
வேந்தன்