சீர்காழி சட்டைநாதர் கோயிலில், இரவு முழுவதும் புஷ்ப பல்லாக்கில் வீதி உலா வந்த பஞ்சமூர்த்தி சுவாமிகள்!

சீர்காழி சட்டைநாதர் சுவாமி கோயிலில், பஞ்சமூர்த்தி சுவாமிகள் சிறப்பு புஷ்ப பல்லாக்கில் இரவு முழுவதும் வீதி உலா வந்த நிலையில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில்,…

சீர்காழி சட்டைநாதர் சுவாமி கோயிலில், பஞ்சமூர்த்தி சுவாமிகள் சிறப்பு புஷ்ப பல்லாக்கில் இரவு முழுவதும் வீதி உலா வந்த நிலையில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில், திருநிலைநாயகி அம்மன் உடனாகிய பிரம்மபுரீஸ்வரர் சுவாமி அருள் பாலிக்கும் சட்டை நாதர் சுவாமி கோயிலில்  32 ஆண்டுகளுக்குப் பிறகு  விமரிசையாக கும்பாபிஷேகம் நடைபெற்று முடிந்தது. அதனை தொடர்ந்து இரவு விநாயகர், வள்ளி தெய்வானை உடனடியாக முருகப்பெருமான், சுவாமி -அம்பாள், சண்டிகேஸ்வரர் ஆகிய சுவாமிகளுக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றதையடுத்து, பஞ்சமூர்த்தி சுவாமிகள் சிறப்பு புஷ்பப் பல்லக்கில் எழுந்தருளினர்.

தருமபுரம் ஆதீனம் 27வது குரு மகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் முன்னிலையில், சிறப்பு நாதஸ்வர கச்சேரி, நாட்டிய நிகழ்வுடன் புஷ்பப் பல்லக்தில் பஞ்ச மூர்த்திகள் வீதி உலா நடைபெற்றது.

பின்னா் தேரோடும் நான்கு வீதிகளிலும் பஞ்சமூர்த்தி சுவாமிகள் வலம் வந்து  கோயிலை வந்தடைந்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

—-ரூபி

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.