துப்பாக்கிசூடு: கைதான நபரின் புகைப்படத்தை வெளியிட்ட டிரம்ப்…!

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பங்கேற்ற நிகழ்ச்சியில் நேற்று துப்பாக்கி சூடு நடைபெற்றது.

அமெரிக்காவின் வாஷிங்டனில் நேற்று நடைபெற்ற இரவு விருந்து நிகழ்ச்சியில் அந்நாட்டு அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும அவரது மனைவி மெலானியா டிரம்ப் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேடையில் அதிபர் டொனால்டு டிரம்ப் இருந்த நிலையில் திடீரென அங்கு துப்பாக்கி சூடு நடைபெற்றது. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து விரைந்து செயல்பட்ட பாதுகாப்பு அதிகாரிகள் டொனால்டு டிரம்ப் மற்றும் மெலானியா டிரம்ப் ஆகியோரை உடனடியாக வெளியேற்றினர்.

இந்த நிலையில் அதிபர் டிரம்ப் இது தொடர்பாக தனது ட்ரூத் சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் துப்பாக்கி சூடு நடத்தியதாக கைது செய்யப்பட்ட நபரின் புகைப்படத்தை அவர் வெளியிட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.