தமிழ்நாட்டில் உள்ள அரசு சட்டக் கல்லூரியில் படித்த முதல் திருநங்கைக்கு வழக்கறிஞர் பதிவுக்கான சான்றிதழ் வழங்கப்பட்டது.
சென்னையில் கடந்த 2000ஆம் ஆண்டு பிறந்தவர் கண்மணி. பள்ளிப்படிப்பை முடிக்கும் நிலையில் இருந்த இவர், பாலின மாறுபாடு அடைந்து வந்துள்ளார். அதனால் இவரை பெற்றோரும், குடும்பத்தினரும் ஏற்க மறுத்த நிலையில், 2017ஆம் ஆண்டு, 12ஆம் வகுப்பை முடித்தவுடன் வீட்டிலிருந்து வெளியேறி, விடுதியில் தங்கி, டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரியில் ஐந்தாண்டு சட்டப் படிப்பு படித்துள்ளார். இந்நிலையில், இன்று அவருக்கு வழக்கறிஞர் பதிவுக்கான சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
சென்னை உயர்நீதிமன்ற வளக்கத்தில் உள்ள பார் கவுன்சில் வளாகத்தில் நடைபெற்ற
இந்த நிகழ்ச்சியில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் தலைவர் பி.எஸ்.அமல்ராஜ், கண்மணிக்கு வழக்கறிஞர் பதிவுக்கான சான்றிதழ் மற்றும் அடையாள அட்டை ஆகிவற்றை வழங்கினார். இதன்மூலம் டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரியில் படித்து வழக்கறிஞரான முதல் திருநங்கை என்ற பெருமையை கண்மணி பெற்றுள்ளார்.
குடும்பத்தினர் ஏற்க மறுத்தாலும், பள்ளி, கல்லூரியில் சக மாணவர்களும், ஆசிரியர்களும், பேராசிரியர்களும், கல்வி கற்க துணை புரிந்ததாகவும், வழக்கறிஞர் ஆனதோடு நிறுத்திவிடாமல் நீதிபதிக்கான தேர்வில் பங்கேற்று வெற்றி அடைய வேண்டும் என்ற நோக்கில் பயிற்சி பெற்று வருவதாகவும் கண்மணி தெரிவித்துள்ளார்.
நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி
பார் கவுன்சில் தலைவர் பி.எஸ்.அமல்ராஜ், ”ஒவ்வொரு ஆண்டும் சட்டம் படித்து வழக்கறிஞராக பதிவு செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஆண்களுக்கு நிகராக பெண்களின் எண்ணிக்கை உயர்ந்து வருவது மகிழ்ச்சி அளிக்கிறது. பிற மாநிலங்களில் படித்து தமிழ்நாடு கவுன்சிலில் பதிவு செய்ய வரும் வழக்கறிஞர்களின் ஆவணங்களை முறையாக ஆராய்ந்த பிறகே, அவர்கள் பதிவு செய்யப்படுகின்றனர்.
சென்னை உயர்நீதிமன்றத்திற்கு ஒதுக்கப்பட்ட 75 நீதிபதிகளுக்கான இடங்களில் உள்ள 19 காலிப்பணியிடங்களை கொலீஜிய பரிந்துரைகளை ஏற்று, சமூக நீதியை கடைப்பிடித்து,
தாமதம் இல்லாமல் நிரப்ப மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். உச்சநீதிமன்ற மன்றத்தின் தென் மண்டல அமர்வை அமைக்க வேண்டும். உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக அறிவிக்க வேண்டும். தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் வலியுறுத்தி வரும் கோரிக்கையில், பார் கவுன்சிலும் துணை நிற்கிறது” என்று தெரிவித்தார்.